Friday, November 27, 2009

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.


(ஆன்மீகத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அனுபவித்து உணர்ந்திட்ட வரிகள். பாடிப்பாருங்கள். உள்ளம் கரைந்து உணர்வீர்கள்.)


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

யாமொரு பிச்சை பாத்திரம்

ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு

சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு

சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


அம்மையும் அப்பனும் தந்ததா?…..

இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?.....

அம்மையும் அப்பனும் தந்ததா?

இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?

இம்மையை நான் அறியாததால்…..

இம்மையை நான் அறியாததால்

சிறு பொம்மையின் நிலையினில்

உண்மையை உணர்ந்திட ,

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


அத்தனை செல்வமும் உன்னிடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒருமுறையா…. இருமுறையா…

பலமுறை பலபிறப்பெடுக்க வைத்தாய்.

புது வினையா…. பழ வினையா…

கனம் கனம் தினம் எனை

துடிக்க வைத்தாய்.

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும்

துரத்துதே…..

உன் அருள் அருள் அருள் என்று

அழைகின்ற மனம் இன்று

பிதற்றுதே….

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பதத்தால் தாங்குவாய்

உன் திருக்கரம் எனை அரவணைத்து

உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


‘இசைஞானி’ இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல்

– ‘ரமணமாலை’ எனும் இசைத் தொகுப்பிலிருந்து.

இன்றைய சிந்தனை

வாழ்க்கையின் தத்துவம் தேடித் திரிகின்றோம். உன்னைத் தேடினால் வாழ்க்கை கூடிவரும்
Related Posts Plugin for WordPress, Blogger...