Friday, March 11, 2011

மச்சக்காரன் - தினம் ஒரு கவிதை











தெரு முக்காடு போட்டுக்கொண்டது
பெண்கள் புசு புசுத்தனர்
ஆண்கள் மெளனமாய் அழுதனர்
உறவைத்தேடி ஒரு கூட்டம்
ஊமையாய் தேடியது.

காலையில் வீழ்ந்தது
மாலையும் கடந்தது
விட்டுவிடவும் முடியாது
வெட்டிவிடவும் முடியாது
திண்டாடியது ஒரு கூட்டம்

சரி சரி அப்படியே போடமுடியாது
காரியங்கள் விருவிருப்பாயின
சடங்குகள் சடலத்திற்கெதற்கு
சொர்க்கம் பார்க்க இன்னும்
எத்தனையோ இருக்கப்பா!

உலகம் பார்த்த உடலில்
உள்ளம் தேடிப் பார்க்கிறான்
எரிகின்ற நெருப்பின் வெப்பத்தில்
அவள் விற்ற உடலில்
'மச்சக்காரன்' பச்சையாக

அய்யய்யோ...
வெட்டியனாய் வைத்த கொள்ளி
கட்டியவனாய் முடியவில்லையே
இவன் 'மச்சக்காரன்'
தாலிக்கு சொந்தக்காரன்.
Related Posts Plugin for WordPress, Blogger...