Wednesday, May 04, 2011

அந்திம விடியல் ஆசை


அந்திம விடியலில்
காற்றில் விரைந்து
சென்று கொண்டிருந்த
அந்த சிவப்பு நாக்கை
நகம் கொண்டு
பின்னத்தொடங்கியது
கருங்குரங்கு

ஆசையென்றால்
அந்த வண்ணத்தையும்
இணைத்துக் கொள்ளேன்
என்றபோது தான்
உணரத் தொடங்கினேன்
புலர்ந்து கொண்டிருப்பது
என் மரணம் என்று.

வழிந்த பச்சை ரத்தம்
இனிக்கும் என்றாலும்
இளம் கற்கள் இங்கு
ஏன் கும்மாளமிடுகின்றன?
வழித்துக் கொண்டு
படுத்துறங்கும் பண்பாடு
பழகத் தெரியுமா
உனக்கும்... எனக்கும்...

Related Posts Plugin for WordPress, Blogger...