Wednesday, July 26, 2006

'இமைப்பொழுது' - இமை - 14

'இமைப்பொழுது' - இமை - 14

********** ஷாட் 0027 ************

'வாங்க சார், நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் சார், உள்ள வாங்க சார், உங்க கையால இந்த குத்து விளக்க ஏத்தி வைங்க சார்'
புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் ராகவன். ரீமாசென் போல தோற்றம் கொண்ட பெண்ணொருத்தி அவரிம் மெழுகுவர்த்தியை நீட்ட, அவளின் கரத்தை தழுவிய படியே வாங்கி தீபம் ஏற்றினார்.
விளக்கேற்றி திரும்பிய ராகவனை வரவேற்றது ஓர் இரும்புக்கரம்......
அது திலீப்குமார்.
' என்ன மிஸ்டர் ராகவன், நலமா?' என்றபடி கைகுலுக்கிய போது சிறு நடுக்க்த்தை உணர்ந்தார்.
'ஓ நல்லா இருக்கேன் இன்ஸ்பெக்டர், நீங்க எப்படி இருக்கீங்க?' என்றார் சமாளித்த படி.
'உங்களப் போல சில நல்லவர்கள் எல்லாம் எனக்கு சப்போட்ட இருக்குறப்போ எனக்கென்ன ராகவன்' என்ற திலீப் குமாரை பார்த்து சிரித்தார் ராகவன்.
' அப்புறம் ராகவன், உங்கள நான் ரொம்ப நாளா பார்த்து ஒரு உதவி கேட்கணம்னு நினைத்துக்கிட்டே இருந்தேன்'
'சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்கு பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன், சொல்லுங்க.'
' எனக்கு தெரிஞ்ச பொண்ணு, பேரு ப்ரியா, செகரட்டரிஷிப் கோர்ஸ் பண்ணியிருக்கா, உங்க ஆபீஸ்ல ஒரு வேல போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்'
' அதுக்கென்ன நாளைக்கே வரச்சொல்லுங்க, என்னோட பெர்சனல் செகரட்டரியா வச்சிக்கிறேன்'
'ஓ, ரொம்ப தேங்க்ஸ், இவ்வளவு சீக்கிரமா வேல முடியும் அப்படின்னு நான் நினைக்கவே இல்ல'.
'இதுக்கெல்லாம் என்ன சார் தேங்க்ஸ், நான் உங்களுக்கு பண்ண மாதிரி நீங்க எனக்கு எப்பவாவது உதவ மாட்டீங்களா என்ன' என பிஸினஸ்மேன் பாலிசியில் பேசினார்.
'சரி நாளை காலைல உங்க ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அப்புறம் சந்திக்கிறேனே' என்ற படி கிளம்பினார் திலீப்குமார்.
'சார், எங்களோட சின்ன அன்பளிப்பு நம்ம ஐஸ்வர்யா பாப்பாவுக்காக' என ஒரு மூன்று பட்டுச்சேலைகளை கொடுத்த கடைக்காரரிடம், இரண்டு 100 ரூபாய் கட்டை திணித்து விட்டு விடைபெற்றார், ராகவன்.

********** ஷாட் 0028 ************

செல்லிட பேசி சினுங்கிட, கையிலெடுத்த ப்ரியா, 'ஹாய் டார்லிங், என்ன காலைல இருந்து போனே பண்ணல' என்றார்.
'அதான் இப்ப பண்ணீட்டன்ல' என்ற திலீப்குமார் 'ப்ரியா, நீ நாளையிலிருந்து ராகவனோட பெர்சனல் செகரட்டரியா வேலைக்குப் போற' என்றார்.
'அய்யோ, என்னடா இது வம்புல மாட்டிவுடுற, அவன் ஒரு ஜொல்லுப்பார்ட்டின்னு நான் கேள்விப் பட்டிருக்கேன், அவன் ஆபீஸ்ல அதுவும் பெர்சனல் செகரட்டரியாவா? நோ சான்ஸ்'
'ப்ரியா, அதனால தான் நான் உன்ன அனுப்புறேன்'
'நீ யாரையும் ஈசியா சமாளிச்சிடுவ..... அப்புறம் அவங்க உன் கைப்பொம்மையா மாறிடுவாங்க.... ஆனா நீ மட்டும் அப்படியே மிஸ்,ப்ரியாவா இருப்ப.... ப்ளீஸ், ஒத்துக்க டியர்'
'சரி சரி நாளைக்கு காலைல போறேன், ஆனா அவன் அளவுக்கு மீறினா அப்புறம் நீ தான் டியர் அவனோட கொலைக் கேசையும் டீல் பண்ண வேண்டி வரும், சரியா' என்றாள் சிரித்த படி.....
' ஓகே, பை'
********** ஷாட் 0029 ************
காலையில் அலுவலகம் கிளம்பும் போது ராகவனின் வேலைக்காரனிடம், 'ஏய், அந்த டெண்டர் பைல் எங்க' என்றவரிடம், 'இந்த..... இங்க தான் இருக்கு, பேசாம ஒரு செக்டரி வெச்சா என்னவா' என்றான் வேலைக்காரன். முப்பது வருசமா வேல பார்க்கிறான், அவரிடம் அவனுக்கு கொஞ்சம் உரிமை அதிகம் தான்.
'அது செக்டரி இல்லடா, செகரட்டரி' என்றார்.
'அது என்னவோ, புரிஞ்சா சரி' என்றபடியே சென்றான்.
அப்போ தான் அவருக்கு திலீப்குமார் கூறிய ப்ரியாவின் நினைப்பு வந்தது.
காரில் செல்லும் போது அவருக்கு ப்ரியாவின் நினைப்பு தான்.
சினேகா முதல் நமிதா வரை அனைவரும் அவர் கண்முன் வந்து சென்றார்கள்.

********** ஷாட் 0030 ************

அலுவலகத்தின் வாசலில் இறங்கி அவரின் அறைக்குச் சென்ற ராகவனுக்கு உள்ளே ஒரு அதிர்ச்சிக் காத்திருப்பது தெரியாது.....
அது என்ன?

- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Wednesday, July 19, 2006

'இமைப்பொழுது' - இமை - 13


'இமைப்பொழுது' - இமை - 13


ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். விழியில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது பத்ரியின் தோள் மீது ஒரு கை பட, திடுக்கிட்டுத் திரும்பினான்.
' என்ன பத்ரி, போலீஸ் அது இதுன்னு ஒரே பரபரப்பாக இருக்கு' ஒண்ணும் தெரியாதவனாய் குமார் விசாரிக்க, கண்ணில் கோபத்துடன் குமாரை முறைத்தான் பத்ரி.
' என்னடா, வெவரம் என்னென்னா என்ன மொறக்கிற'
'எல்லாம் உன்னால தான், சரி அப்புறம் பேசலாம், மொதல்ல இங்கயிருந்து கிள்ம்புவோம்.'
'ஏய், நீ அவசரப் படுறதப் பார்த்தா, நீயே கொலை செஞ்சிருப்ப போல இருக்கு?' என்ற குமாரை மீண்டும் ஒரு முறை முறைத்து வண்டில் ஏறி 'உட்காருடா' என்றான் வெறுப்பாக.


********** ஷாட் 0025 *************


'கொடைக்கானல்'
அழகிய வெள்ளை நிற 'சுவராஜ் மஸ்டா' கோடை ஏரிக்கரையில் வந்து நின்றது,
கதவைத் திறந்து கொண்டு வண்ண வண்ண தேவதைகள் துள்ளிக் குதித்து இறங்கினர். கோடை குளிரில் நனைந்த வாலிப உள்ளங்கள் அவர்களைக் கண்டு வாழ்த்து இசைத்தனர். பழகிய தேவதைக் கூட்டம் கண்டு கொள்ளாது சென்றனர்.
இறுதியாக கீழே இறங்கிய ஐஸ்வர்யாவைப் பார்த்து அந்த ஏரி கூட உடல் சிலிர்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஐஸ்வர்யா காலை தரையில் வைத்தவுடன்..
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி. 'யாராஇருக்கும்?' கேள்வியோடு பார்க்க, அதில்


' உன் கால் பட்ட இடங்களில்
என் கரம் தொட்டுக் காக்க
வரம் கொடு.'

- விழியன்


மீண்டும் அவளிடத்தில் ஓர் கேள்வி, 'யார் இந்த விழியன்?' நின்று விழித்த ஐஸ்வர்யாவை அவள் தோழி ரூபா காதில் காற்றூதிக் கலைத்தாள்.
' என்னடி கொடைக்கானல கால் வச்சவுடன் அப்படியே திகைச்சுப் போயிட்ட? ம்.'
தனது செல்லிடபேசியில் செய்தியை அவளிடம் காண்பிக்க 'அப்படிப் போடு, அது தான் சங்கதியா? யாருடி இந்த விழியன்? எனக்குத் தெரியாம?' என்ற ரூபாவை முறைத்த ஐஸ்
'அவன் இங்க எங்கேயோ இருக்கணும், இல்லைனா எப்படி நான் கீழே கால் வச்சதும் மெசேஜ் அனுப்புவான் ' என்றவாறு சுற்றி சுற்றி பார்க்க, மீண்டும்
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி.


'விழிகளால் தேடாதே
விழியனை,
மொழிகள் பேசிட
வழிகள் பிறக்கும்'


- விழியன்


'ஆஹா.......நம்ம ஐஸ் அக்கா மாட்டிக்கிட்டாளா?' நண்பர்கள் கூட்டம் கிண்டலடிக்க,
அச்சம் கலந்த புன்னகை, லேசான கோபம், அவமானம் அனைத்தும் அவள் விழிகளில்.


- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Tuesday, July 18, 2006

'இமைப்பொழுது' - இமை - 12

'இமைப்பொழுது' - இமை - 12
********** கட் 0021 ஷாட் மாத்துப்பா *************

'தட தட தட தட தட தட தட தட தட தட' தலைதெறிக்க ஓடி வந்த முத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ' டேய், டேய், அங்க ஒருத்தனை அடிச்சேக் கொன்னுட்டான் நம்ம குமார்டா.'
' என்னடா சொல்ற'
' ஏய் நிஜமாவா?'
' மெய்யாலுமாடா?'
நண்பர்கள் ஆளுக்கொருவராய் கேட்க, பேச முடியாத முத்து, ' ஆமா, என்பது போல் தலையசைத்து தலை குனிந்து மூச்சு வாங்கினான்..
எங்கடா? என்றவாறு முத்து வந்த திசையை நோக்கி ஓடினான் பத்ரி.
ஆள் ஆரவாரமற்ற அந்த முச்சந்தியில் ஒருவன் தரையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்க, குமார் தனது காரில் ஏறிச் சென்றி விட்டான்.
ஓடிச் சென்ற பத்ரி கீழே விழுந்தனைத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தான்..
அது.........

********** கட் 0022 ஷாட் மாத்துப்பா *************

'டாட் எங்க காலேஜ்ல நாங்க டூர் போறாம், எனக்கு ஒரு 10,000 ருபீஸ் வேணும் டாட்.'
'வாவ், 10000 ருபீஸ் என்னடா 20000 ருபீஸ் தர்றேன், ஆனா நீ மட்டும் டூர் போகமா என் கூட இருந்திருடா'
'டாட், போங்க டாட், என்ன எங்கேயுமே விட மாட்டீங்கிறீங்க, இல்ல டாட் நான் கண்டிப்பா போவேன்'.
'ஓகே, எத்தனை நாள்?'
'3 டேஸ் டாட்'
'அய்யோ, 3 டேஸ்ஸா..... உன்னை பாக்காம ஒரு நாள் இருக்குறதே கஷ்டம், அதுவும் 3 டேஸ்னா, எப்படிடா?...'
'டாட் ப்ளீஸ் டாட், ப்ளீஸ்......'
'ஒகே...ஓகே'
'ஸ்வீட் டாட்' என்றவாறே ராகவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்தாள் ஐஸ்வர்யா.

********** கட் 0023 ஷாட் மாத்துப்பா *************

'ஸார், நம்ம மூணாவது முக்கிய வீதியில் ஒரு பிணம் கிடக்குது சார்' கான்ஸ்டபிள் 302, இன்ஸ்பெக்டரிடம் கூற, போன மாத ரேப் கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சலிப்புடன் நிமிர்ந்து,
யாரது? வயது என்ன இருக்கும்? சரி சரி வாங்க போயி பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.

********** கட் 0024 ஷாட் மாத்துப்பா *************

'போரன்சிக் லேப்க்கு சொல்லியாச்சாப்பா?, பாடிய போஸ்ட்மார்ட்டம் அனுப்பு, நேர்ல பார்த்த சாட்சி யாராவது இருக்காங்களா? என்றவாறே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
'இல்ல சார், யாரும் பாக்கலையாம்' என்றார் கான்ஸ்டபிள் 302.
ஆம்புலன்ஸ் ஒலியை எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.

- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை

Friday, July 14, 2006

மரணத்தில் ???

எண்ணங்களின் மரணத்தில்
தெளிவு என்றாலும்
வார்த்தை வரம் பெறாவிடில்
வேண்டியன மருவலாம்
தேவைகளில் தேடலில்
மனிதன் தன்னை தேட
மறுத்தாலும்
தொலைந்தன கிடைக்கும்
ஏழு கடல் தாண்டி.
ஆனால்
மனிதனின் மரணத்தில் ???

Friday, July 07, 2006

'இமைப்பொழுது' - இமை - 11

'இமைப்பொழுது' - இமை - 11

SMS ஐ படித்த ஐஸ்வர்யாவிற்கு குழப்பம்.

'யார் இந்த விழியன்?'

'கவிதை என்ன சாப்பாட்ட பத்தி இருக்கு? பெயரப் பாத்தா பெரிய கவிஞராட்டம் இருக்கு... யாரு இது?' யோசித்த படி தூங்க ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா.

********** படப்பிடிப்பு தளத்தில் *************

1: என்னம்மா டைரடக்கரு, அஸிஸ்டண்ட்ஸ்லா கதக்குள்ள பூந்துகிறாங்க..... மவனே, நீயும் எங்கயாவது கதகுள்ள வந்த சும்மா கீசிறுவேன்.
2: அங்ஆங்க் அதானே, ஏதோ கொயந்த மனசு நம்ம விழியன் அண்ணாத்தேக்கு, அதான் ஒத்துக்கினு கம்முனுக்கீறேன். ஏன் கைல ராங்கு காட்ன .......
இயக்குனர்: (புலம்பலுடன்) பாருங்கடா, இந்த விழியன்னால நான் கண்ட கண்டவன் கிட்டயில்லாம் பேச்சு கேக்க வேண்டி இருக்கு. அது கூட பரவாயில்ல, அவன போயி குழந்தை மனசுன்றானுகளே......

********** கட் 00-- ஷாட் மாத்துப்பா *************

'டேய் கார்த்திக், உன் ஆள பத்தின விபரம் இந்தா வாங்கிக்க, ஆனா மறக்காம சாயந்திரம் பார்ட்டி தாஜ்ல தான், என்ன சரியா' என்றபடி கல்லூரிக்குள் நுழைந்தான் ஸ்டீவன்.

'தாஜ் என்ன, லீலாவிலேயே தர்றேன்'

பெயர் : ஐஸ்வர்யா
செல்லப் பெயர் : ஐஸ்சு, பப்லு
பிறந்த தேதி: 3 மார்ச் 1987
உயரம்:5'4"
அப்பா : ராகவன் - ஐஸ்வர்யா எக்ஸ்போர்ட்ஸின் மேனேஜிங் டைரக்டர்.
அம்மா : பாவம் போன வருசம் தான் போயி சேந்துட்டாங்க.
சகோதர சகோதரிகள் : அந்த மாதிரி வில்லி, வில்லன்கள் யாரும் இல்ல...
இது வரை வந்த சேதி: யாரையும் காதலிக்கவில்லை.
அவளுக்கு பிடித்தது : கவிதை, ரகுமானின் இசை, குழந்தைகள்
பிடிக்காதது: ஆணாதிக்கம், வறுமை

'அப்ப நம்ம கார்த்திக்கு ஏத்த ஆள் இல்லைன்னு, சொல்லு' கூட இருந்த மனோ ஒத்தூத.

கோபத்தில் மனோவை முறைத்தான் கார்த்திக்.

'அவ எனக்குத்தான், இத யார் தடுத்தாலும் விட மாட்டேன்' என்றபடியே ரஜினி ஸ்டைலில் சிகரெட்டை பத்த வைத்தான் கார்த்திக்.

- இமை இன்னும் திறக்கும்.

இயக்குனர் : விபாகை
உதவி (உபத்திரம்) இயக்குனர்கள்: லாவண்யா, விழியன், சிவா.....

Thursday, July 06, 2006

'இமைப்பொழுது' - இமை - 10

'இமைப்பொழுது' - இமை - 10

********** கட் 0017 ஷாட் மாத்துப்பா *************

'காபி சாப்பிடுங்க' என்றாள் கீதா, ரவிசுந்தரிடம்.

'இல்ல வேணாம்'

'சரி நான் தான் எதையும் மனசில வச்சுக்கலன்னு சொல்லீட்டேன்ல, அப்புறம் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...... தலை வலிக்குதா?' என்றாள் ரவிசுந்தரின் நெற்றியில் கை வைத்துக் கொண்டு.

திடீர் என குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் ரவி,

' என்னைய மன்னிச்சிடு.. கீதா, மன்னிச்சிடு' என்றான் அவளைத் தழுவிக் கொண்டு.

மனம் கரைய அவள் கண்ணிலும் நீர்.

'க்கூக்கு... க்கூக்கு....' - அழைப்பு மணி ஒலித்தது,

சட்டென பிரிந்து, கண்ணீரை தனது துப்பட்டாவில் துடைத்தபடியே கதவைத் திறந்தாள்.

வாசலில் குமார்.

'சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன், ரம்யா அவசரமா ஊருக்குப் போயிட்டா, யாரோ அவளோட சொந்தக்காரர் இறந்துட்டாராம். அதான் வீட்டுச் சாவியை கொடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். சாரி' என்றான் குமார்.

'அய்யோ, அதெல்லாம் ஒண்ணுமில்ல.... கொடுத்திட்டுப் போங்க', என்றாள் கீதா மலுப்பலாக.

' என்ன ரவிசுந்தர் சார்! ஆபிஸ்க்குப் போகலையா?, நான் வாரேன்', என்று எந்த பதிலுக்கும் காத்திராமல் கிளம்பினான்.

கதவைச் சாத்திட்டு திரும்பிய கீதாவின் கன்னத்தில் 'நச்சென்று' முத்தமிட்டு, சிரித்தபடி 'நானும் ஆபிஸ் கிளம்புறேன்' என்று சென்றவன் தான், ஆளையே காணேம்.

********** கட் 0018 ஷாட் மாத்துப்பா *************

'என்னடி இன்னும் தூங்கலையா?' என்று அம்மா கேட்டதும், பழைய நினைவில் இருந்து மீண்டாள் கீதா.

'இல்லமா, தூக்கம் வரல, நீங்க படுங்க, கொஞ்சம் பால்கனில வாக் போய்ட்டு வந்து படுக்கிறேன்' என்றாள் கீதா.

********** கட் 0019 ஷாட் மாத்துப்பா *************

'பீப் பீப்', ஐஸ்வர்யாவின் செல்லிடபேசியில் ஒரு SMS.

கல்லூரிக் காலங்களில் நம்ம ஐஸ்சு போல ஒரு அழகான் பொண்ணுக்கு SMS வருதுன்னா..... நமக்கு உள்ளத்தில் ஐஸ் தானே

இயக்குனர்: SMS என்னன்னு மக்களுக்குச் சொல்லிடலாமா? இல்ல வேணாமா?

உதவி இயக்குனர்கள்: சும்மா சொல்லு சார், சும்மா சும்மா சஸ்பென்ஸ் வச்சா, அப்புறம் நேயர்கள் / வாசகர்கள் கோச்சிக்கப் போறாக

'ஒற்றைப் பருக்கை உணவு கூட

ஒழுங்காய் ஜீரணிப்பதில்லை - உன்

ஓரப்பார்வையால்

ஓசையின்றி இதயத்தை விழுங்கிய பின்...

- விழியன்'

SMS ஐ படித்த ஐஸ்வர்யாவிற்கு குழப்பம்.

'யார் இந்த விழியன்?'

- இமை இன்னும் திறக்கும்.

இயக்குனர்: 'யார்ரா, இவனை உள்ள விட்டது? கொஞ்சம் அப்படி போயிடக் கூடாதே, உள்ள வந்து என்ன குழப்பம் பண்ணப் போறானோ?'

உதவி இயக்குனர்கள்: சார்... சார்.... எங்கல எல்லாம் இப்படி கட்டிப் போட்டுட்டு உள்ள போயிட்டான் சார்.

இயக்குனர் : விபாகை

உதவி (உபத்திரம்) இயக்குனர்கள்: லாவண்யா, விழியன், சிவா.....

Wednesday, July 05, 2006

'இமைப்பொழுது' - இமை - 9

'இமைப்பொழுது' - இமை - 9
' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.

********** கட் 0014 ஷாட் மாத்துப்பா *************

ரவிசுந்தர் முனங்குவதைக் கண்ட நர்ஸ், கீதாவின் அறைக்குச் சென்று ' இங்க யாருங்க சுனிதா, அடுத்த ரூம்ல இருக்குற பேஷண்ட் கூப்பிடுறாருங்க' என்றவளைப் பார்த்து அதிர்ந்தாள்.

'அய்யோ, பாருடி ரம்யா, அவருக்கு என் நினைப்பே போச்சு. இப்ப கூட சுனிதாவைத்தான் தேடுறாரு' என்றாள் கீதா அழுதபடி.

'ஏய் நீ அழுகாத, நான் போயி என்னனு பார்க்கிறேன்' என்றவள் , ' என்னங்க.. நீங்க கீதாவை கொஞ்சம் பார்த்துக்குங்க, நான் இதோ வந்திடுறேன்' என்றபடி சென்றாள் ரம்யா.

********** கட் 0015 ஷாட் மாத்துப்பா *************

'ரவி, எப்படி இருக்கீங்க' என்றாள் ரம்யா, ரவியின் தலைமுடியைக் கோதியபடி யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்ற பார்த்துக் கொண்டே...

'சுனிதா, நீயா இப்படி பண்ணுன' ரவிசுந்தர் புலம்பினான்.

'விடுங்க ரவி' அதுதான் நான் உங்க பக்கத்தில இருக்கன்ல' என்றாள் காதோரமாக...

ரம்யாவின் மூச்சின் அனலில் கண் விழித்த ரவி, ' நீங்க எப்ப வந்தீங்க.? கீதா எங்கே? ' என்றான்.

'ஆகா! மயக்கத்துல சுனிதா...... விழிச்சுண்டா கீதாவா?' என்றாள் ரம்யா நக்கலாக.

'சுனிதான்னா சொன்னேன்' என்றபடி மீண்டும் கண் அயர்ந்தான் ரவிசுந்தர்.

ரவியின் நிலையைக் கண்டு ரம்யாவின் மனம் கஷ்டப் பட்டாலும், இது நடைபெறாவிட்டால், தன்னால் ரவியை என்றுமே அடையமுடியாமல் போய் விடுமே என்பதால் சிறிது சந்தோஷப் பட்டாள்.

********** கட் 0016 ஷாட் மாத்துப்பா *************

ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய ரம்யா தனது செல்லிடபேசியில்
'ராம் ரொம்ப தேங்ஸ் ராம், எப்படியோ சுனிதா மேட்டர் கீதா காதுக்கு போயிடுச்சு. ரவிய சுனிதாவோட ஆளுங்க தான் அடிச்சாங்கன்னு கீதா நம்பிட்டா, ஆனா சுனிதா யாருன்னு உனக்கு தெரியுமா? இன்னைக்குத் தான் நான் அவள பாத்தேன். அசந்து போட்டேன். அவ என் காலேஜ்மேட். ரொம்ப நல்லவ... ஆனா அவ எப்படி ரவியோட? என்னால நம்பவே முடியல, ராம். உங்களுக்கு ரொம்ப தேங்ஸ்' என்ற ரம்யா மாருதி ஜென்னில் ஏறினாள், அவள் பேசியதை எல்லாம் ஒரு செல்லிடபேசி கேமராவில் பதிவாகிக் கொண்டிருப்பது தெரியாமல்.

- இமை இன்னும் திறக்கும்.

Tuesday, July 04, 2006

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

நாள் - ஜூலை 9,2006 (ஞாயிறு)

இடம் : லால் பாக் கார்டன்ஸ்

நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 வரை (உங்கள் விருப்பம் தான்)

பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒரு நாள் முன்னராவது iyappan_k@yahoo.com அல்லது umanaths@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து தங்கள் வரவை தெரியப்படுத்தவும்.
சந்திப்பின் இடையே சின்ன சின்ன விவாதங்களும் இருக்கும்.
1.வலைப்பதிவுகளின் வரலாறு (புதிய வலைப்பதிவர்களுக்கு ஏதுவாக இருக்கும்)
2. வலைப்பதிவுகள் ஏன், அதன் எதிர்காலம்?
3. வலைப்பதிவுகள் வலிமை என்ன? அது இன்னும் என்ன விஷயங்களை வலுவாக செய்யலாம்?
4. வலைப்பதிவுகள் எப்படி சாதாரண மனிதனை சென்றடைய போகின்றது. அச்சில் வெளிவர என்ன வாய்ப்புலள் உள்ளது?

இதுவரை எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்த நாம்,நேரிலே சந்தித்து, உரையாடி, தமிழ் பேசி, விளையாடி மகிழ்வோம்.

நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்.

-விபாகை.

'இமைப்பொழுது' - இமை - 8

'இமைப்பொழுது' - இமை - 8

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

கலவரமானாள் கீதா.

'ஏய் அமைதியா இரு' என்ற ரம்யா தனது கணவரிடம் ' ஏங்க நீங்க போயி பார்க்கக் கூடாதா?' என்றாள் அவசரமாக...

கிளம்பிய குமாரை தடுத்து 'நீங்க இருங்க, நான் போய் பார்க்கிறேன்' என்றவாறு கிளம்பினாள் ரம்யா.

வேகமாக சென்ற ரம்யா, சுனிதாவைக் கண்டவுடன் சிறிது திகைத்து நின்றாள்.

சுனிதா ரம்யாவை பார்த்து புன்னகைத்த படி, ' என்னடி, ஆச்சரியாம இருக்க. நான் எப்படி இங்க உயிரோட அப்படீன்னு...' ஆரம்பித்து பேசிக் கொண்டே போனாள்.

இயக்குனர்: கேமராமேன் சுனிதாவின் கண்களில் க்ளோசப் ஷாட் வச்சுக்க. அப்புறம் சுனிதாவைச் சுத்தி சுத்திவாங்க. மியூசிக் டைரக்டர், இந்த இடத்துல மியூசிக் கொஞ்சம் ஹெவியா வேணும். ஓகே...

புன்னகைத்த சுனிதாவின் கண்களில் கொலை வெறி அதிகமானது.

'நீ யாருன்னு எல்லோருக்கும் சொல்லாம நான் போக மாட்டேன்.' ஆனா இப்ப நான் கீதாவை பாக்கணும்'னு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சுனிதா.

உள்ளே நுழைந்த சுனிதா நேராக கீதாவிடம் சென்று, 'கீதா, நல்ல இருக்கீங்களா? வாழ்க்கைல தைரியம் நிறைய இருக்கணும். உடம்ப பார்த்துக்கோங்க' என்றவளிடம், கீதா கத்த ஆரம்பித்து விட்டாள்.

' ஏய்! யார்டி நீ, என் வாழ்க்கையை கெடுக்கவே வந்தியா?' போயிடு... என் வாழ்க்கையில இருந்து போயிடு'

'போயிடவா, இப்ப தான் வாசலுக்கே வந்திருக்கேன், அதுக்குள்ள வெறட்ட பாக்குற... நத்திங் டூயிங் கீதா. நீ பார்க்க வேண்டியதும், புரிஞ்சிக்க வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கு கீதா.. இப்ப போறேன், ஆனால் மீண்டும் மீண்டும் வருவேன்.' என்று திமிரான நக்கலுடன் கூறி விருட்டென வெளியேறினாள்.

பிரமித்த படி பார்த்த கீதா, 'ரம்யா? ரம்யா? எங்கடி இருக்க' என்று கத்த

வெளியே இருந்த ரம்யா, மெதுவாக உள்ளே வந்தாள்.

'அமைதியா இரு கீதா'

'என்ன பேசிட்டுப் போறா பாத்தியா?'

'சரி விடு, பேசிட்டா... ஆயிடுமா.... விடுடி' என்றாள் மலுப்பலாக.

'என்னடி நீயா இப்படி பேசுற' ஆச்சரியமாக கேட்டாள் கீதா.

இது எதுவும் புரியாதது போல நின்றிருந்தான் குமார் மனதுக்குள் சிரித்துக் கொண்டு.

********** கட் 0013 ஷாட் மாத்துப்பா *************

' ம் ம்ம்ம்ம் , சுனிதா... ' வலியில் முனங்கினான் ரவிசுந்தர்.

- இமை இன்னும் திறக்கும்.

Friday, June 30, 2006

'இமைப்பொழுது' - இமை - 7


'இமைப்பொழுது' - இமை - 7


காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையிலேயே உறைந்து போனாள் கீதா.
நடக்க கூட முடியாமல் வந்த சுந்தரை டிரைவர் தான் தாங்கி பிடித்து அழைத்து வந்தான், 'என்னங்க... என்ன ஆச்சு' என்று அலறிய கீதாவிடம் ' ஒண்ணுமில்லம்மா, முதல்ல சாரை உள்ளே கூட்டிட்டு போயி படுக்க வைங்க சொல்லுறேன்', என்றான் டிரைவர்.

சுந்தரை தன் தோளில் தாங்கி படுக்கை அறையில் படுக்க வைத்தாள். உடனே வெளியே வந்து டிரைவரிடம், ' என்னப்பா ஆச்சு?' என்றாள்.
'அது ஒண்ணும் இல்லமா? அது வந்து...... அது வந்து...... ' என இழுக்க ஆரம்பித்தான் டிரைவர்.
'என்ன வந்து.... போயின்னு இழுக்குற...... என்ன நடந்ததுன்னு சொல்லப் போறயா. இல்லையா?' என சிறிது அதட்டலாகவே கேட்டாள்.
'அது வந்து...... நம்ம ஆபீஸ்ல இருக்குற சுனிதாவிற்கும் நம்ம அய்யாவுக்கும் ரொம்ப நாளா பழக்கம் இருக்குமா'
'பழக்கம்னா?' கீதாவின் குரலில் ஆயிரம் குழப்பங்கள்.
'அப்பப்ப் இரண்டு பேரும் வெளில போவாங்க.... வருவாங்க....'
'வெளில போறதுல்லாம், ஒரு தப்பாப்பா, அத நீயும் சொல்லுறயா?'
' வெளிலனா, மைசூர், ஊட்டி, அப்படின்னு.......'
'ஆனா, சுனிதாவுக்கு அங்க அண்ணன் வேற மாப்பிள்ள பார்க்க.... நம்ம அய்யா போயி தடுத்திருக்காரு. அது பெரிய பிரச்சனையாகி, அய்யாவை ஆபிஸ்க்கு வெளியில வைச்சு அடிச்சிட்டாங்க.... நல்ல வேளையா ஒண்ணும் பெரிசா அடி படல.'
கீதாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது, மயங்கி கீழே விழுந்தாள்.

********** கட் 0012 ஷாட் மாத்துப்பா *************

ஆஸ்பத்திரில் கீதா கண் விழித்த போது, அவள் பக்கத்து வீட்டுத் தோழி ரம்யாவும் அவள் கணவன் குமாரும் நின்றிருந்தனர். ரம்யாவைப் பார்த்தவுடன் கீதாவிற்கு அழுகை பீறிக்கொண்டு வந்தது.


'என்னோட நிலைமையப் பாத்தியா, ரம்யா' என கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
'ஏய் கண்ரோல் யுவர்செல்ப், என்ன ஆச்சு? ஏன் மயங்கி விழுந்த? ரவிசுந்தரையும் அடுத்த வார்டுல தான் அட்மிட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு ப்லிம் போறதா தானே சொன்ன? அப்புறம் என்ன இப்படி?' என ஆயிரம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் ரம்யா.
நடந்ததைக் கூறிய கீதாவை நம்ப முடியாமல் பார்த்தனர் ரம்யாவும், குமாரும்.
இல்ல கீதா, சுந்தர் அப்படி நடக்கக் கூடிய ஆள் இல்ல... இதுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ரம்யா கூறியதைக் கேட்கக் கூடிய மன நிலையில் கீதா இல்லை.

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

- இமை இன்னும் திறக்கும்.

Thursday, June 29, 2006

'இமைப்பொழுது' - இமை - 6


'இமைப்பொழுது' - இமை - 6


மேண்டரினில் (சீன மொழி) இருந்த அந்த துண்டுச்சீட்டில், லண்டனில் உள்ள ஓர் வங்கியில் உடனே 1 லட்சம் மலேசிய டாலர் கட்டும் படி ராகவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

யூ குய்ங் விரைவாக செயல்பட ஆரம்பித்தாள். இரு மின்னஞ்சல்கள், ஒரு போன்கால் தான், சரியாக லண்டன் நேரம் 2.00 மணிக்கு ரவிசுந்தர் கூறிய வங்கி கணக்கில் இந்திய ரூபாயில் 10 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

********** கட் 0010 ஷாட் மாத்துப்பா *************

'மம்மி...! டாடி எப்ப வருவாரு?' என்று கேட்ட சித்ராவை முறைத்துவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள் கீதா.
மீண்டும் சித்ரா,'நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மம்மி... டாடி எப்ப வருவாங்க?'
'அந்த மனுஷன் எங்க இருக்காரோ? எங்க சுத்துறாறோ? எவளுக்குத் தெரியும்.. அப்ப அப்ப காணாம போயிட வேண்டியது.. அவனவன் ஏன் கிட்ட வந்து கேட்டுக்கிட்டு. இந்த தடவை வரட்டும் இரண்டுல ஒன்னு பாத்திடுறேன்.'
'ஏண்டி மாப்பிள்ள, ஆபிஸ் விசயமா ஊருக்குப் போயிருக்கார்னு சொன்ன? இப்ப வேற என்னமோ சொல்ற? என்ன விசயம்.' என்ற படியே வந்தாள் கீதாவின் அம்மா.
'ம்ம்ம்ம்ம்.... ஒண்ணுமில்லமா, சும்மா தான், அப்ப அப்ப ஆபீஸ் விசயமா எங்கயாவது போயிடுறாருல அது தான் அப்படி சொன்னேன்' என சமாளித்தாள் கீதா.
'என்னமோடி, நீ சொல்றதுல எனக்கு ஏதும் நம்பிக்கையில்ல..... வாம்மா சித்ரா கண்ணு, பாட்டி உனக்கு கத சொல்லுறேன்' என்று சித்ராவை அழைத்துக்கொண்டு சென்றாள் கீதாவின் அம்மா.
அம்மாவிடம் தன்னால் நடிக்க முடியாதை எண்ணி வருந்தினாள் கீதா.
எல்லாத்துக்கும் காரணம் அந்த சுனிதா தான். கீதாவின் எண்ணம் பின்னோக்கி சென்றது.


********** கட் 0011 ஷாட் மாத்துப்பா *************

அன்று கீதாவின் பிறந்த நாள். மாலை குடும்பத்துடன். 'சப்வே' சென்று விட்டு, அப்படியே மல்டிப்ளக்ஸில் 'சிவகாசி' படம் பார்ப்பதாக ஏற்பாடு.
காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையில்யே உறைந்து போனாள் கீதா.

- இமை இன்னும் திறக்கும்.

Wednesday, June 28, 2006

'இமைப்பொழுது' - இமை - 5

'இமைப்பொழுது' - இமை - 5
********** கட் 0007 ஷாட் மாத்துப்பா *************

'கருடா மால்' - காலை - 9.00 மணிக்கு இன்னும் விழித்துக் கொள்ளவேயில்லை. தனது புதிய மாருதி ஸ்விப்டை பார்க்கிங் செய்துவிட்டு மேலே வந்தார் திலீப் குமார். சில முக்கிய வேலையாக (அதுவும் உளவு பார்க்க போகும் போது) தனது அலுவலகக் காரை அவர் உபயோகப்படுத்துவதில்லை.

தனது செல்லிடபேசியில் ப்ரியாவை அழைத்தார். ரிங்க் போகுமுன் 'ஹாய்!' ப்ரியாவின் குரல் தான், திரும்பினார். எதிரே 7up பாட்டிலாக ப்ரியா நின்றிருந்தாள்.

ஹாய்! ப்ரியா, எப்படி இருக்க? புன்னகைத்த படி கேட்டார் திலீப்குமார்.
'பாத்தா தெரியல' என நக்கலாக கேட்ட ப்ரியா, நேராக விசயத்திற்கு வந்தாள்.
'SMS செய்தி உண்மை தான், திலீப். நீங்க உடனே ஆக்சன் எடுக்கணும்'
'ராகவன் யாருக்காக பணம் அனுப்பப்போறார்னு உனக்கு ஏதாவது தெரியுமா?
'அது தெரிஞ்சா நான் ஏன் உங்க பின்னால சுத்தப் போறேன்'
'சரி, அப்ப இந்த கேஸ்ல நாம அவசரப் பட வேண்டாம்' என்ற திலீப் தனது திட்டத்தை ப்ரியாவிடம் விளக்க ஆரம்பித்தார்.

(பின்னனி இசை ஒலிக்க, கேமராமேன் ட்ராலி ஷாட்ல 'கருடா மால்' உச்சிக்கே சென்று விட்டார்.)

ஒருபுறம் ப்ரியா தனது ஹோண்டாவில் பறக்க மறுபுறம் திலீப் தனது ஸ்விப்டில் ஏறினார்.

********** கட் 0008 ஷாட் மாத்துப்பா *************

ராகவன் தனது மடிக்கணணியில் தனது மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
'Urgent from RS' என்ற மெயிலை திறந்த போது அது ரவிசுந்தரின் மின்னஞ்சல் எனத் தெரிந்தது.
'ஓ! இன்னைக்கு பத்து லட்சம் அனுப்பணுமோ?' லேசாக யோசித்த ராகவன். மின்னஞ்சலில் இருந்த வங்கிக்குறியீட்டு எண்ணை குறித்துக் கொண்டார்.
ஏற்கனவே, வருமானவரித் துறையின் பார்வை ராகவனின் மேல் பலமாக இருக்கு. எப்படி பணம் அனுப்புவது.. தீவிரமாக யோசிக்கலானார்.

********** கட் 0009 ஷாட் மாத்துப்பா *************

மலேசியாவின் கேயெல் நகரில் ஒரு பல அடுக்குமாடிக் குடியிருப்பு. மலேசிய நேரம் காலை 12.00 மணி.
'டக், டக் ' - கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்தாள் யூ குய்ங் சூ.
யாரையும் காணாது வியந்த அவள், தனது கடிதப்பெட்டியில் இருந்த துண்டுச்சீட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
மேண்டரினில் (சீன மொழி) இருந்த அந்த துண்டுச்சீட்டில், லண்டனில் உள்ள ஓர் வங்கியில் உடனே 1 லட்சம் மலேசிய டாலர் கட்டும் படி ராகவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

---- இமை இன்னும் திறக்கும்
1 : (லண்டன், மலேசியா ன்னு நல்லா சுத்துறானுக.... பாவம் தயாரிப்பாளர். :( )
2 : (அடுத்து எந்த ஊருக்கு போறாங்கன்னு பாப்போம்)

இயக்குனர் : விபாகை

Tuesday, June 27, 2006

இமைப்பொழுது - இமை - 4

ஊடகமனிதன் வழங்கும்....
இமைப்பொழுது - இமை - 4

Message 2:
'Check for Industrialist Raghavan's Account today - Misuse of 10 lakhs to London - yours lovingly 'PRIYA' '.
அதிர்ந்தார் திலீப்குமார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு 'ப்ரியா' -விடமிருந்து SMS.

செய்தியைக் காட்டிலும், ப்ரியாவுடன் மீண்டும் ஒரு முறை வேலைப் பார்க்கப் போவதைப் பற்றி நினைத்தாலே இனித்தது திலீப்குமாருக்கு. கவிதா அருகில் இருக்காளா? என்று நோட்டம் விட்டுக் கொண்டே செல்லிடபேசியில் 'ப்ரியா'வை அழைத்தார்.

'டைலாமோ டைலாமோ....' என்ற ஹலோ ட்யூன் ஒலித்தது ப்ரியாவின் செல்லிடபேசியில். (காதல் சந்தியாவின் இடத்தில் ப்ரியாவை நினைத்து பார்க்கத் தவறவில்லை அவர்)

'ஹாய்! திலீப் டார்லிங் ' - அய்யோ..... ப்ரியாவே.. தான்......
' இன்னும் நீ மாறவே இல்லையா?'
'எப்படி டியர் மாற்றது, இன்னைக்கு நேத்து பழக்கமா என்ன?' ப்ரியாவின் குரலில் அளவுகடந்த கனிவிருந்தது.
' சரி,... சரி மேட்டருக்கு வா?'
'ஓ! சுவீட், அப்ப 'சன்னீஸ்'-ல டின்னர் முடிச்சுட்டு அப்படியே போயிடலாம். ஓக்கேயா?'
'நீ அதுலையே.... இரு..' 'அந்த மேட்டர் இல்ல...' SMS மேட்டர்ரா !'
'ஓ அதுவா! இப்ப டைம் 6.45. சுமார் 9 மணிக்கு கருடா மால் வந்திரு, ஓக்கே?' - கட் செய்தாள் ப்ரியா.

1:(ப்ரியாவும், திலீப்பும் போலீசாருங்களா? இல்ல போலி சாருங்களா? )
2: ( 'லீ' ரெட் டேப் - ஜீன்ஸ் போட்டு டைட் டாப்ஸ் போட்டுக்கிட்டு சும்மா கலக்குறாயா? - ம்ம்ம்ம் கொடுத்துவச்ச திலீப்குமார். )
இயக்குனர்: டேய்! ஜொல்லுவிடாதீங்கடா? விழியா? எங்க இருக்கப்பா??? உனக்கு போட்டியா... நிறைய ஆளுங்க இருக்காங்கப்பா....

- இமை இன்னும் திறக்கும்

இயக்குனர்: விபாகை

Monday, June 26, 2006

இமைப்பொழுது - இமை - 3

ஊடகமனிதன் வழங்கும்....
இமைப்பொழுது - இமை - 3
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது. செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார். அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. குழப்பத்தில் புருவம் சுழித்து, செல்லிடபேசியை கையிலெடுத்தார்.

இயக்குனர்: கேமராமேன்! கேமராவை கையில வைத்துக்கிட்டு சும்மா ஒரு பத்து நிமிசம் சுத்தி சுத்தி வாப்பா.

கேமராமேன்: அய்ய்ய்ய்ய்யா..... சான்ஸ்யா??

1: ( ஆரம்பிச்சுட்டாங்கடா? )
2: (கொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிங்கலேம்ப்பா??? :( )

விரல்கள் 'Call' பொத்தானை அழுத்த 'ஹலோ! ' - இது சுந்தரின் குரல் தான்.
எதற்காக ரவி தனக்கு தொலைபேசுகிறான் என்பது புரியாமல் ராகவன் 'ஹலோ! ரவி' - என்றார்.
'ராகவ், நான் லண்டன்ல இருந்து பேசுறேன். நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்', என்றான்.
'லண்டன் !!!?? என்ன சொல்ற சுந்தர், உன்னைய எல்லாரும் இங்க காணோம்னு தேடிக்கிட்டிருக்காங்க... நீ என்னடான்னா... லண்டனிலிருந்து பேசிறேன்னு சொல்லுற....' கொஞ்சம் அதட்டலான குரலிலும், ஆனால் கனிவாகவும் கேட்டார்.
'ராகவ், நான் அத அப்புறமா சொல்லுறேன். எனக்கு இப்போ அவசரமா, ஒரு 10 லட்சம் வேண்டியிருக்கு. அதுவும் நாளைக்கே. உடனே, வெஸ்டர்ன் யூனியன்-ல அனுப்புங்க. அக்கவுண்டிங் டீடைல்ஸ உங்களுக்கு உடனே இமெயில்-ல அனுப்புறேன்'.
10 லட்சமா? என அதிர்ந்த ராகவன் பின்பு, சரி அனுப்புறேன் என்றார்.
'அப்புறம் ராகவ், நான் பேசினேன்னோ, லண்டன்ல இருக்கேன்னோ, யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம், குறிப்பா கீதாவுக்கு சொல்ல வேண்டாம். ப்ளீஸ்!' என்றான் சுந்தர்.
'சரி' என்றாலும் ராகவனின் குரலில் அத்தனை திருப்தியில்லை.

********** கட் 0005 ஷாட் மாத்துப்பா *************

'காபி டியர்' - என்றபடி எழுப்பிய மனைவியை கட்டிப்பிடித்து 'அதுக்குள்ளேயா?' என்றார் துணை போலீஸ் கமிஷனர் திலீப்குமார்.
' சீப்போங்க' சிணுங்கிய படி விழகிய கவிதா 'முதல்ல காபி குடிங்க' என்றாள்.
காபியை குடித்துக் கொண்டே, தன் செல்லிடபேசியை எடுத்தார் திலீப்குமார்.
'2 Messages Received' செல்லிடபேசியில் பதிவாகியிருந்தது.
' தனக்கும் சிலர் காலைவாழ்த்து செய்திகள் அனுப்புகிறார்களா என்ன ? ' - செய்திகளை படிக்க ஆரம்பித்தார்.
Message 1:
'You are so lucky to have me as a wife. - Good Morning ' - கவிதாவிடம் இருந்து தான் இந்த செய்தி. புன்னைகையோடு அடுத்த செய்திக்கு தாவினார்.
Message 2:
'Check for Industrialist Raghavan's Account today - Misuse of 10 lakhs to London - yours lovingly 'PRIYA' '.
அதிர்ந்தார் திலீப்குமார்.

---- இமை இன்னும் திறக்கும்

1 : (மெகா தொடரா? இல்ல சஸ்பென்ஸ் தொடராப்பா? )
2 : (சரி சரி, ஏதோ ஒண்ணு, எப்படித்தான் கத போகுதுன்னுப் பாப்போம்.)
இயக்குனர் : விபாகை

Friday, June 23, 2006

இமைப்பொழுது - இமை - 2

ச்சூ...................... ( Sound Effect)
ஊடகமனிதன் வழங்கும்....
ச்சூ...................... ( Sound Effect)
இமைப்பொழுது
ச்சூ...................... ( Sound Effect)
இமை - 2
ச்சூ...................... ( Sound Effect)
1: (ஏய்... டைட்டில் போட்டுட்டாங்கப்பா... சீக்கிரம் வாடா)
2: (அட பாட்டு முடிய இன்னும் 5 நிமிசம் ஆகும். அப்புறம் வர்றேன்)
இயக்குனர்: பாட்டெல்லாம் இல்லப்பா... உடனே ஸ்டார்ட் தான்.

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில் ஆயிரம் கேள்விகள். சித்ராவின் காலை எடுத்து மெல்ல படுக்கையில் வைத்து எழுந்தாள். மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய பலமாடி அடுக்குக் குடியிருப்பு அது. இந்நேரம் அவ்வளவு எளிதாக யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது..

காவல்காரரோ..... பக்கத்து வீட்டு குமரன் சாரோ..... இல்ல... அவனோ !!! ??? படுக்கை அறையிலிருந்து வாசல் வரை செல்லும் முன், அவள் நினைவில் பலர் வந்து போனார்கள்.

தற்காப்பு சங்கலியைப் போட்டுத்தான் கதவைத் திறந்தாள். அவளால் நம்ம முடியவில்லை. அம்மா! நீ எப்படிம்மா இங்க! ஆச்சரியத்தில் கதவைத் திறக்கவே மறந்து நின்று விட்டாள். குழம்பிய அவள் முகத்தில் நிம்மதி... சந்தோசம்... திகைப்பு...! என்னடி கதவைத் திறக்க மாட்டாயா? என்று அம்மா கேட்டப் பிறகு தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. கல்யாணத்திற்கு பின் அம்மா வீட்டிற்கு வந்தால் மகள் எவ்வளவு சந்தோசப் படுவாள் என்பது அனுபவித்தால் தான் தெரியும்.

என்னடி மாப்பிள்ளையக் காணேம்? அம்மாவின் கேள்விக்கு பதில் தெரியாது விழித்தாள். பின் சமாளித்து அலுவலக வேலையா வெளியூர் போயிருக்கார்னு சொன்னதை அம்மா நம்பியதாகத் தெரியவில்லை. 25 வருட ஆசிரிய வாழ்க்கையில் இப்படி பொய் பேசிய எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பாள். ஒரு சந்தேகப் பார்வைப் பார்த்து விட்டு தன் பேத்தியைப் பார்க்கப் போனாள்.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

ஹாய்! மாம்ஸ்! என்னடா இவ்வளவு லேட்டா வர்ற... இரண்டாவது சுற்றில் இருந்த ஸ்டீவன், கார்த்திக்கைப் பார்த்துக் கண்ணடித்தான். சேரை இழுத்துப் போட்ட கார்த்திக் சர்வரிடம் ஒரு கிங்பிஷர் கொண்டு வரச் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே உட்கார்ந்தான்.
'இல்ல மச்சி, வர்ற வழில ஒரு பொண்னைப் பார்த்தேன்டா! இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கான்னா பார்த்துக் கோயேன்.'
'அப்படியா! கொஞ்சம் கண்ணைக்காமி பார்க்கலாம் ' என்றான் ஸ்டீவன் கிண்டலாக.
'போடா...' என்றான் சிரித்துக் கொண்டே.
'மாம்சு, பொண்ணு யாருடா?'
'அதான் தெரியலடா?' என்றான் கிங்பிஷரை சுவைத்துக் கொண்டே.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

'ஐஸ்சு... சாப்பிட வாடா' மாடியைப் பார்த்து கூப்பிட்டார், ராகவன்.
'டாட், நான் சாப்பிட்டாச்சு டாட்' - என்றபடியே இறங்கி வந்தாள் ஐஸ்வர்யா.
'சாப்பிட்டையா? எங்க...'
'டாட்... என் பிரண்டு ஒருத்திக்கு இன்னைக்கு பெர்த் டே, சோ, பார்ட்டிக்கு போயிட்டு வர்றேன்'
'பார்ட்டியா?' எங்கடா?'
'ஹோட்டல் லீ மெரிடியண்ட், டாட்'
'ஓ! அங்க சுந்தர் அங்கிளப் பார்த்தியா?'
'இல்ல டாட். ஏன் டாட்?'
'சுந்தர் கொஞ்ச நாளா க்ளப்-க்கு வரல. அதான் நீயாவது பார்த்தியான்னு கேட்டேன். சாயந்திரம் ஆச்சினா 'ஹோட்டல் லீ மெரிடியண்ட்'-ல தானே இருப்பான்..... அதான்'
'இல்ல டாட். வேணும்னா ராஜேஷ்ட்ட கேட்கவா டாட்?'
'வேணாம்மா, நான் பார்த்துக்கிறேன். சரி சரி லேட்டாயிடுச்சு, நீ போய் தூங்கு.'
'சரி டாட்'
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது.
செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார்.
அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

---- இமை இன்னும் திறக்கும்

1 : (ஆகா... இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற.. சனி, ஞாயிறு தொடர் உண்டா? இல்லையா?)
2 : (என்னடா? இரண்டாவது எபிசோடுலையே இப்படி பொலம்புற? சரி சரி நாளைக்கு பார்ப்போம். என்ன ஆகுதுன்னு.)
இயக்குனர் : (உதவி இயக்குனர்கள் எல்லாம் சனி, ஞாயிறு லீவு வேணும்னு கேக்குறாங்கப்பா... பாவம் வாரத்தில இரண்டு நாளாவது நம்ம மக்கள் நல்ல இருக்கட்டும்.. திங்கள் கிழமை வந்து வச்சுக்கிறேன்.)

இயக்குனர் : விபாகை

Thursday, June 22, 2006

இமைப்பொழுது - ஒரு மெகா கதை

ச்சூ...................... ( Sound Effect)

ஊடகமனிதன் வழங்கும்.... (அட வேற ஒன்னும் இல்லீங்க.. (MediaMan Presents) தான்)

ச்சூ...................... ( Sound Effect)

இமைப்பொழுது

ச்சூ...................... ( Sound Effect)

இமை - 1

ச்சூ...................... ( Sound Effect)

1 : (என்னையா.... வெளம்பரமெல்லாம் போடலையா?.. கொஞ்சம் வெளில போயி தம் போடலாம்ன்னு பாத்தா? என்னப்பா.... சத்தத்தையே காணோம்...)

2 : (அட நீ வேற! அந்தா இந்தான்னு இப்பதான் டைட்டிலே போட்டிருக்காய்ங்கே... இனி இவிங்கே கத சொல்லி... அட பாவம்டா... இந்த முத்தமிழ் குடும்பம்....)

இயக்குனர் : (டேய்... முட்டாப்பசங்களா... இப்பதான் ஒரு வழியா நம்ம முத்தமிழ் மக்கள சரிக்கட்டி டைட்டில் போட்டிருக்கேன்... அதக் கெடுத்துறாதிங்கடா.... ப்ளீஸ்!)

சாயந்திரம் பெய்த மழையினால், ஜன்னல் வழியாக காற்று ஜில்லென்று வீசியது. காற்றில் ஆடிய அவளின் முடியை சுந்தர் பார்த்திருந்தால் இந்நேரம் கவிதை மட்டுமல்ல... கன்னத்தில் ஓர் ஓவியமே அல்லவா! வரைந்திருப்பான். கீதா கண்மூடி கண்ணீர் குளித்தாள்.

இரவின் தனிமை அவளை உண்மையில் மிகவும் வாட்டியது. இன்றோடு 14 நாட்களாகி விட்டது தன் மீது கால் போட்டுத் தூங்கும் 5 வயது சித்ராவை பார்த்ததும் கீதாவிற்கு கண்ணீர் அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரால் எப்படி முடிந்தது? என்னையை விட அவனுக்கு சித்ராவின் மீது தான் எத்தனை பாசம்? அப்புறம் ஏன் இப்படி? கேள்விகள் அவளை தின்று கொண்டிருந்தது.

டக் டக்... டக் டக்... (கதவு தட்டும் ஓசை)

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில்...........


---- இமை இன்னும் திறக்கும்

1 : (என்னடா... அதுக்குள்ள தொடரும் போட்டானுக....)
2 : (அதான்.. மெகா கதன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாகல்ல.... அப்பறம்ன்ன...)
இயக்குனர் : (அய்,,,, நம்மளப்பத்தி நல்லா தெரிஞ்சி வெச்சிருக்காய்ங்கடா!)

இயக்குனர் : விபாகை

உதவி இயக்குனர்கள் : வேற யாரு.... நம்ம சமுக மக்கள் தான்.

Thursday, April 20, 2006

புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடி

ம்மா என்று சொல்
ளுமை வளர்
லக்கை உயர்த்து
ன்றவள் மனம் குளிர்
லகினை நேசி
ர் நலம் பேண்
ளிமை பயில்
ளனம் அகல்
ம்புலன் கல்
ற்றுமை பழகு
ங்கிய எண்ணம் கொள்
ஓள .......... (யாராவது முழுமை செய்யுங்களேன் .... ப்ளீஸ்...)
தே வாழ்க்கை..


- விபாகை


இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.. நமக்கும் தான்...

Saturday, March 18, 2006

நீ என்னுள் இருக்கும் வரை

காய்ந்து வெடித்துப் போன
கரிசல்காட்டு பூமியாய்
மனது வெறுத்துப் போனது

பருவம் தவறினாலும்
என்றாவது பொழியும்
மழையாய்
நீ கொட்டி விடு


என் வெடித்த புண்களில் - நீ
சாரலாய் இறங்கி விடு

இளகி குழைந்திடும்
என் மணம்
நீ
என்னுள் இருக்கும் வரை.

-- விபாகை

Thursday, March 16, 2006

நீ புன்னகைத்தாய்

வானத்தாளில் மேக ஓவியம்
- நீ புன்னகைத்தாய்

சூரியத் தலைப்பாகையில்
வெள்ளிக்கோடுகள்
- நீ புன்னகைத்தாய்

ஒளிப்பட்டுத் தெறித்தன
புல்லின் பனித்துளி
- நீ புன்னகைத்தாய்

பனிக்குளியலில் தலை
சிலிர்த்த பூச்செடி
- நீ புன்னகைத்தாய்

அழகின் ஆணவத்தில்
நிமிர்ந்த மலர்கள்
- நீ புன்னகைத்தாய்

ஆசையின் ம்யக்கத்தில்
சுற்றித் திரிந்தன தேனிக்கள்
- நீ புன்னகைத்தாய்

மென்மையும் வன்மையும்
தான் கூடும் போல!
- நீ புன்னகைத்தாய்

ரீங்ங்ங்கார இசையில்
உறவின் பயணம்
- நீ புன்னகைத்தாய்

கலைப்பில் வாடிய மலர்
மற்றொன்றில் தேனி
- நீ மாறுகிறாய்....!

என்ன எண்ணம் உன்னுள் !
நானும் அப்படித்தானோ ?

-விபாகை

Wednesday, March 15, 2006

சுழல் செய்தி நான்கு

எனக்கு பிடித்த நாலு விசயங்கள்

பிடித்த 4 நபர்கள்:
1. அம்மா
2. என்னுள் உறைந்திருக்கும் ...........
3. என் அன்பு மனைவி
4. என் அன்பு மகள்


இருந்த 4 இடம்:
1. அருப்புக்கோட்டை - (பிறந்தது)
2. மதுரை - (சுற்றியது)
3. சென்னை - (வாழ்வை அறிந்தது)
4. பெங்களூர் - (வாழ்வை தேடித் தேடி...)


பிடித்த 4 இடம் :
1. அருப்புக்கோட்டையில் என் அம்மாவின் மடி
2. மதுரையில் டவுன்ஹால் ரோடு
3. சென்னையில் மெரினா பீச் - வாழ்வின் முடிவையும் ஆரம்பத்தையும் நான் இங்கே தான் உணர்ந்து கொண்டேன்
4. திருவண்ணாமலை - கோவில் ஆஹா என்ன அமைதி


போக விரும்பும் 4 இடம்:
1. இமாலய மலை அடிவாரம் - ரிஷிகள் இருப்பாங்களாமே?
2. சிங்கப்பூர் - சுறுசுறுப்பான அந்த மக்களைப் பார்க்கணும்
3. இராமேஸ்வரம்
4. கேரளா படகுகுடில்


பிடித்த, போக விரும்பும் 4 விடுமுறை இடம்:
1. கொடைகானல்
2. ஊட்டி
3. சிம்லா
4. குற்றாலம்


பிடித்த 4 உணவு:
1. பரோட்டா - குருமா (எங்க ஊருல இது பேமஸ்பா)
2. பூரி
3. கோழி வகைகள்
4. கடலை மிட்டாய் (ஐய் ..... எனக்கு ரொம்ப புடிக்கும்)


பிடித்த 4 விலங்கு:
1. புலி - என்ன லுக்கு தெரியுமா?
2. நாய்
3. பூனை
4. யானை.


பிடித்த 4 பறவை:
1. மயில்
2. புறா
3. பச்சைக் கிளி
4. காதல் பறவை ( லவ் பேர்ட்ஸ் தான்...)


பிடித்த 4 படம்:
1. தெய்வ மகன்
2. சலங்கை ஒலி
3. அன்பே சிவம்
4. டைட்டானிக்


பிடித்த 4 நடிகர்:
1. சிவாஜி (வேற யாரா இருக்க முடியும்)
2. கமல்
3. நாசர்
4. ரகுவரன்


பிடித்த 4 நடிகை:
1. சிம்ரன்
2. ஜோதிகா
3.
மீரா ஜஸ்மின்
4. ....... (இது இன்னும் காலியாகத் தான் உள்ளது)


சந்தோசமான 4 நிகழ்வுகள்:
1. என் மகள் பிறந்தவுடன் கைகளில் வாங்கிய அந்த இளகாலை வேளை]
2. ஒவ்வொரு ஓவியம் முடியும் போதும் ஏற்படும் திருப்தி
3. எனது கனணி மையம் மாவட்டத்தின் சிறந்த் மையமாக அறிவிக்கப்பட்டது
4. என் மகள் இந்த வருடம் பள்ளியில் சிறந்த மாணவியாக (ஆல்ரவுண்டர்) திடீர் என மேடையில் அருவித்த போது (அவர்கள் பள்ளியி எப்போதும் அப்படித் தான் அறிவிப்பது வழக்கம்)


பிடித்த 4 விசயங்கள்:
1. அடுத்தவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வு சொல்வது... (நம்மல.. யாரும் கேட்க மாட்டேன்கிறாங்கப்பா)
2. நபர்களை ஆராய்வது (reading a person)
3. நிழற்படம்
4. வரைபடம்


என்னிடம் இருக்கும் எனக்கே பிடிக்காத 4 விசயங்கள்:
1. கோபம்
2. கோபம்
3. கோபம்
4. கோபம்


சோகமான 4 விசயங்கள்:
1. கும்பகோணம் தீ விபத்து
2. சுனாமி
3. என் பள்ளி நாட்களில் இறந்து போன என் உயிர் நண்பன் - கண்ணன்.
4. நான் பார்த்திராத என் தந்தை முகம் (நான் ஆறு மாத குழந்தையாக இருந்த போது என் தந்தை மரணம் அடைந்து விட்டார்.)


பிடித்த 4 நண்பர்கள்:
1. எஸ். எஸ். சுகுமாரன் (எலும்பு சிகிச்சை நிபுணன்)
2. தங்கபாண்டியன் (கார்பன் பேப்பர் தொழில்சாலை வைத்திருக்கிறான்)
3. பழனிக்குமார் (ஆசிரியன்)
4. அனைத்து நண்பர்கள்(முக்கியமாக வலை நண்பர்கள்)


அவ்வளவு தாங்க..... வேற என்ன எழுத.....
சரி சரி நீங்களும் தான் இது மாதிரி ஏதாவது எழுதுங்களேன்...

- விபாகை

Tuesday, March 14, 2006

இறைவனின்....


இறைவனின்
குழந்தைகள் நாம்
பசித்திருக்கிறோம் தாயே!
பாலூட்டு

ஞானப் பாலல்ல
தாய்ப் பாலாவது....

---- விபாகை

Sunday, March 12, 2006

முள்ளில்லா ரோஜா


உன் மனத் தோட்டத்தில்
என் உள்ள ரோஜாக்ளை
பதியமிடு
உன் அரவணைப்பில்
நான் செழிப்பேன்
உனக்கு மட்டும்
நான்
முள்ளில்லா ரோஜா...

- விபாகை

Saturday, March 11, 2006

காதல் கிறுக்கல்கள்

நண்பர்களே! இது ஒரே கவிதையல்ல!. வேறு வேறு நேரங்களில் எழுதியவை.

காதல் உலகின் முதல் மொழி.
அதுவே எமது தாய் மொழி.

என் பார்வையில்
உன் உருவம்
பதிந்ததும்
இமைகள் மட்டுமல்ல
என் இதயமும் துடித்தது.

----- 000 ------

சிரித்துக் கொண்டிருக்கிறாய்
பைத்தியமானது நான் தானே
நீ எப்படி?

----- 000 ------

இதயத்தை இமெயிலில்
அனுப்பி வைக்கிறேன்.
அப்படியாவது
உன் இன்-பாக்ஸில்
இருக்கட்டுமே.

----- 000 ------

உன் மெளனம்
என்னை புலம்ப வைத்தது
கவிதை.

----- 000 ------

சூரியனைக் கூட
சுட்டெரிப்பேன்
உன் மீது காய்ந்தால்.

----- 000 ------

சூரியன் சுட்டெரித்தால் கூட
சுகம் தான்
உன் முந்தானை நிழலில்.

----- 000 ------

அவள் காதலித்த போது
கிறுக்கலும் கவிதையாய்.
நீ திருமணம் செய்த போது
கவிஞனும் கிறுக்கனாய்.

----- 000 ------

செல்லறித்த
உன் நினைவுகளை
சொற்களில் கொட்டினேன்
கிளறிய மனக்குப்பைக்குள்
காதல் வாடை.



- விபாகை

ஏனோ சொல்ல நினைக்கிறேன் - 1


திருச்சி செல்ல வேண்டி பேரூந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்திட சற்று விலகி நின்று கொண்டிருந்தேன். திடீரென பேரூந்திலிருந்து சத்தம்..... நீ யாருடா! அதை கேட்க! நான் சும்மா வருவேன். மூட்டையை தூக்கிட்டு வருவேன். வேணும்னா நீ பார்த்து போ!' என்று ஒருவர் கூறிட... அதற்கு மற்றவர் 'நீ மூட்டையை தூக்கிட்டு வா. இல்ல வீட்டையே தூக்கிட்டு வா...எனக்கு கவலை இல்ல! ஆனா யாரு மேலயும் இடிக்காம கொண்டு போ!' இது ம்ற்றவர். அதாவது முதலாமவர் கையில் மிக பெரிய பையோடு ஏறி இருக்கிறார். அது ம்ற்றவர் மேலே இடித்து விட..... அதற்கு மற்றவர் ஏதோ கூறிட அதன் விளைவு தான் மேலே உள்ள உரையாடல்.

உரையாடல் வ்ழுத்து முதலாமவர் பேரூந்திலிருந்து இறக்கி விடப்பட்டார். இறங்கியவர் என் அருகே வந்து நிற்க அவருடன் வந்த நண்பரும் கூடவே வந்து சேர்ந்தார். நண்பர் அவரிடம் 'ஏண்டா! நீ யாருடனும் கோபப்படவே மாட்டியே! இன்னைக்குஎன்ன ஆச்சு உனக்கு? என்று கேட்டார். அவரும் நடந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு 'இல்லடா! எனக்கே புரியல! நான் ஏன் இப்படி ந்டந்துக்கிட்டேன்னு?'என்றார். சிறிது நேரம் கழித்து 'காலையில, வீட்டுல என் வீட்டுக்காரியோட தொல்ல தாங்க முடியல.ஒரே அர்ச்சனை! உனக்கு தான் தெரியுமே, அவ பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தவே மாட்டான்னு, இன்னைக்கு கொஞ்சம் அதிகம். உள்ளுக்குள்ளேயே இருந்த கோபம் இப்ப கொட்டிடுச்சு, மன்னிச்சிருடா! எனக்கே கஷ்டமா தான் இருக்கு' என்றார்.

நான் சிந்தித்து பார்த்தேன். இப்படித் தான் சில சிறிய வினாடிகளில் நாம் நமது சுய அறிவை இழந்து எத்தனையோ தவறுகள், அதுவும் நம்மையும், பிறரையும் வெகுவாக பாதிக்கும் செயல்களை செய்து விடுகிறோம். அது தவறு என்று உண்ர்ந்தாலும் காரியம் தான் முடிந்து விட்டதே? வருந்தினாலும் பயன் இல்லையே? தாங்க்ள் பொறுமை இழக்கும் முன் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! நீங்கள் உங்கள் முகத்தை இழ்க்கப் போகிறீர்கள் என்று.

- விபாகை

இயற்கை இதைத் தான் செய்கிறது

இரவின் முடிவில் விடியல்
புயலின் முடிவில் அமைதி
குழப்பத்தின் முடிவில் தெளிவு
போராட்டத்தின் முடிவில் விடுதலை
தேடலின் முடிவில் உண்மை
உழைப்பின் முடிவில் வெற்றி
பிரிவின் முடிவில் புதிய உறவுகள்
இயற்கை இதைத் தான் செய்கிறது...

மாறாத கருத்தில்
மாறுதல் வேண்டாமே.....

--- விபாகை.

தமிழே! வணக்கம்

ஏனோ வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. அது இன்று தான் நிறைவேறுகிறது..,

நன்றி தோழர். சிவாவிற்கு....


- விபாகை....

Related Posts Plugin for WordPress, Blogger...