Saturday, March 18, 2006

நீ என்னுள் இருக்கும் வரை

காய்ந்து வெடித்துப் போன
கரிசல்காட்டு பூமியாய்
மனது வெறுத்துப் போனது

பருவம் தவறினாலும்
என்றாவது பொழியும்
மழையாய்
நீ கொட்டி விடு


என் வெடித்த புண்களில் - நீ
சாரலாய் இறங்கி விடு

இளகி குழைந்திடும்
என் மணம்
நீ
என்னுள் இருக்கும் வரை.

-- விபாகை

3 comments:

thiru said...

நல்ல கவிதை விபாகை.

இதை போன்ற இன்னொரு கவிதை http://panithuli.blogspot.com/2005/11/blog-post_113321103093596919.html

rnatesan said...

சோகத்தை சொன்னார் போல் உள்ளதே!! நன்றி!!வந்துவிட்டேன்!!இனி தொடரும் என் விமர்சனம்!!

விபாகை said...

நன்றி திரு.. தங்களின் கவிதையும் அற்புதம். கவிஞர்கள் பலசமயங்களில் ஒரே போல சிந்திக்கிறார்கள் என்பது சரிதான் போலிருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...