Saturday, March 11, 2006

காதல் கிறுக்கல்கள்

நண்பர்களே! இது ஒரே கவிதையல்ல!. வேறு வேறு நேரங்களில் எழுதியவை.

காதல் உலகின் முதல் மொழி.
அதுவே எமது தாய் மொழி.

என் பார்வையில்
உன் உருவம்
பதிந்ததும்
இமைகள் மட்டுமல்ல
என் இதயமும் துடித்தது.

----- 000 ------

சிரித்துக் கொண்டிருக்கிறாய்
பைத்தியமானது நான் தானே
நீ எப்படி?

----- 000 ------

இதயத்தை இமெயிலில்
அனுப்பி வைக்கிறேன்.
அப்படியாவது
உன் இன்-பாக்ஸில்
இருக்கட்டுமே.

----- 000 ------

உன் மெளனம்
என்னை புலம்ப வைத்தது
கவிதை.

----- 000 ------

சூரியனைக் கூட
சுட்டெரிப்பேன்
உன் மீது காய்ந்தால்.

----- 000 ------

சூரியன் சுட்டெரித்தால் கூட
சுகம் தான்
உன் முந்தானை நிழலில்.

----- 000 ------

அவள் காதலித்த போது
கிறுக்கலும் கவிதையாய்.
நீ திருமணம் செய்த போது
கவிஞனும் கிறுக்கனாய்.

----- 000 ------

செல்லறித்த
உன் நினைவுகளை
சொற்களில் கொட்டினேன்
கிளறிய மனக்குப்பைக்குள்
காதல் வாடை.



- விபாகை

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...