Monday, December 20, 2010

“வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா

அன்பு நிலாரசிகனின் நான்காவது கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா.

தேதி : டிசம்பர் 26
இடம்: தேவ நேயர்பாவாணர் மாவட்ட மைய நூலகம்.
நேரம் : மாலை 6 மணி

நண்பர்கள் கலந்துகொண்டு கவிஞர் நிலாரசிகனை வாழ்த்துமாறு வேண்டுகிறேன்.

மேலும் மேலும் உச்சங்களை அடைய வேண்டும்.
வாழ்த்துகிறேன்.

விபாகை

Wednesday, October 27, 2010

நீ

வாழ்ந்த போது
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.

மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.

----------------------------------

உன் இதயத்துடிப்பின்
இசை கேட்டு
துயில வேண்டும்.

விழியில் மறுத்த‌
தூக்கம்
உன் மடியில் வந்தது.

----------------------------------

சற்றே பறித்த
அழகிய மலருடன்
உன்னை சந்தித்தேன்
மலரொன்றும்
அத்தனை அழகில்ல தான்.

----------------------------------

நீ
கடந்து சென்று
திரும்பி பார்க்கிறாய்.
புயல் கடந்து
தென்றல் வீசியது.

– விபாகை
Related Posts Plugin for WordPress, Blogger...