Thursday, June 22, 2006

இமைப்பொழுது - ஒரு மெகா கதை

ச்சூ...................... ( Sound Effect)

ஊடகமனிதன் வழங்கும்.... (அட வேற ஒன்னும் இல்லீங்க.. (MediaMan Presents) தான்)

ச்சூ...................... ( Sound Effect)

இமைப்பொழுது

ச்சூ...................... ( Sound Effect)

இமை - 1

ச்சூ...................... ( Sound Effect)

1 : (என்னையா.... வெளம்பரமெல்லாம் போடலையா?.. கொஞ்சம் வெளில போயி தம் போடலாம்ன்னு பாத்தா? என்னப்பா.... சத்தத்தையே காணோம்...)

2 : (அட நீ வேற! அந்தா இந்தான்னு இப்பதான் டைட்டிலே போட்டிருக்காய்ங்கே... இனி இவிங்கே கத சொல்லி... அட பாவம்டா... இந்த முத்தமிழ் குடும்பம்....)

இயக்குனர் : (டேய்... முட்டாப்பசங்களா... இப்பதான் ஒரு வழியா நம்ம முத்தமிழ் மக்கள சரிக்கட்டி டைட்டில் போட்டிருக்கேன்... அதக் கெடுத்துறாதிங்கடா.... ப்ளீஸ்!)

சாயந்திரம் பெய்த மழையினால், ஜன்னல் வழியாக காற்று ஜில்லென்று வீசியது. காற்றில் ஆடிய அவளின் முடியை சுந்தர் பார்த்திருந்தால் இந்நேரம் கவிதை மட்டுமல்ல... கன்னத்தில் ஓர் ஓவியமே அல்லவா! வரைந்திருப்பான். கீதா கண்மூடி கண்ணீர் குளித்தாள்.

இரவின் தனிமை அவளை உண்மையில் மிகவும் வாட்டியது. இன்றோடு 14 நாட்களாகி விட்டது தன் மீது கால் போட்டுத் தூங்கும் 5 வயது சித்ராவை பார்த்ததும் கீதாவிற்கு கண்ணீர் அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரால் எப்படி முடிந்தது? என்னையை விட அவனுக்கு சித்ராவின் மீது தான் எத்தனை பாசம்? அப்புறம் ஏன் இப்படி? கேள்விகள் அவளை தின்று கொண்டிருந்தது.

டக் டக்... டக் டக்... (கதவு தட்டும் ஓசை)

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில்...........


---- இமை இன்னும் திறக்கும்

1 : (என்னடா... அதுக்குள்ள தொடரும் போட்டானுக....)
2 : (அதான்.. மெகா கதன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாகல்ல.... அப்பறம்ன்ன...)
இயக்குனர் : (அய்,,,, நம்மளப்பத்தி நல்லா தெரிஞ்சி வெச்சிருக்காய்ங்கடா!)

இயக்குனர் : விபாகை

உதவி இயக்குனர்கள் : வேற யாரு.... நம்ம சமுக மக்கள் தான்.

1 comment:

சுதாகர் said...

ஆகா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா!!

ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க...!


என்னோட பேரன்/பேத்தி-க்கு இந்த கதயோட முடிவ தெரிஞ்சா சரிதான்...

Related Posts Plugin for WordPress, Blogger...