Friday, June 30, 2006

'இமைப்பொழுது' - இமை - 7


'இமைப்பொழுது' - இமை - 7


காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையிலேயே உறைந்து போனாள் கீதா.
நடக்க கூட முடியாமல் வந்த சுந்தரை டிரைவர் தான் தாங்கி பிடித்து அழைத்து வந்தான், 'என்னங்க... என்ன ஆச்சு' என்று அலறிய கீதாவிடம் ' ஒண்ணுமில்லம்மா, முதல்ல சாரை உள்ளே கூட்டிட்டு போயி படுக்க வைங்க சொல்லுறேன்', என்றான் டிரைவர்.

சுந்தரை தன் தோளில் தாங்கி படுக்கை அறையில் படுக்க வைத்தாள். உடனே வெளியே வந்து டிரைவரிடம், ' என்னப்பா ஆச்சு?' என்றாள்.
'அது ஒண்ணும் இல்லமா? அது வந்து...... அது வந்து...... ' என இழுக்க ஆரம்பித்தான் டிரைவர்.
'என்ன வந்து.... போயின்னு இழுக்குற...... என்ன நடந்ததுன்னு சொல்லப் போறயா. இல்லையா?' என சிறிது அதட்டலாகவே கேட்டாள்.
'அது வந்து...... நம்ம ஆபீஸ்ல இருக்குற சுனிதாவிற்கும் நம்ம அய்யாவுக்கும் ரொம்ப நாளா பழக்கம் இருக்குமா'
'பழக்கம்னா?' கீதாவின் குரலில் ஆயிரம் குழப்பங்கள்.
'அப்பப்ப் இரண்டு பேரும் வெளில போவாங்க.... வருவாங்க....'
'வெளில போறதுல்லாம், ஒரு தப்பாப்பா, அத நீயும் சொல்லுறயா?'
' வெளிலனா, மைசூர், ஊட்டி, அப்படின்னு.......'
'ஆனா, சுனிதாவுக்கு அங்க அண்ணன் வேற மாப்பிள்ள பார்க்க.... நம்ம அய்யா போயி தடுத்திருக்காரு. அது பெரிய பிரச்சனையாகி, அய்யாவை ஆபிஸ்க்கு வெளியில வைச்சு அடிச்சிட்டாங்க.... நல்ல வேளையா ஒண்ணும் பெரிசா அடி படல.'
கீதாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது, மயங்கி கீழே விழுந்தாள்.

********** கட் 0012 ஷாட் மாத்துப்பா *************

ஆஸ்பத்திரில் கீதா கண் விழித்த போது, அவள் பக்கத்து வீட்டுத் தோழி ரம்யாவும் அவள் கணவன் குமாரும் நின்றிருந்தனர். ரம்யாவைப் பார்த்தவுடன் கீதாவிற்கு அழுகை பீறிக்கொண்டு வந்தது.


'என்னோட நிலைமையப் பாத்தியா, ரம்யா' என கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
'ஏய் கண்ரோல் யுவர்செல்ப், என்ன ஆச்சு? ஏன் மயங்கி விழுந்த? ரவிசுந்தரையும் அடுத்த வார்டுல தான் அட்மிட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு ப்லிம் போறதா தானே சொன்ன? அப்புறம் என்ன இப்படி?' என ஆயிரம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் ரம்யா.
நடந்ததைக் கூறிய கீதாவை நம்ப முடியாமல் பார்த்தனர் ரம்யாவும், குமாரும்.
இல்ல கீதா, சுந்தர் அப்படி நடக்கக் கூடிய ஆள் இல்ல... இதுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ரம்யா கூறியதைக் கேட்கக் கூடிய மன நிலையில் கீதா இல்லை.

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

- இமை இன்னும் திறக்கும்.

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

அட! இத்தனை நாளா இத்தொடர் என் கண்ணில் படாம போச்சே...மிஸ்
பண்ணிட்டேன்

விபாகை said...

நன்றி.. அப்பப்ப கமெண்ட் எழுதுங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...