Friday, June 23, 2006

இமைப்பொழுது - இமை - 2

ச்சூ...................... ( Sound Effect)
ஊடகமனிதன் வழங்கும்....
ச்சூ...................... ( Sound Effect)
இமைப்பொழுது
ச்சூ...................... ( Sound Effect)
இமை - 2
ச்சூ...................... ( Sound Effect)
1: (ஏய்... டைட்டில் போட்டுட்டாங்கப்பா... சீக்கிரம் வாடா)
2: (அட பாட்டு முடிய இன்னும் 5 நிமிசம் ஆகும். அப்புறம் வர்றேன்)
இயக்குனர்: பாட்டெல்லாம் இல்லப்பா... உடனே ஸ்டார்ட் தான்.

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில் ஆயிரம் கேள்விகள். சித்ராவின் காலை எடுத்து மெல்ல படுக்கையில் வைத்து எழுந்தாள். மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய பலமாடி அடுக்குக் குடியிருப்பு அது. இந்நேரம் அவ்வளவு எளிதாக யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது..

காவல்காரரோ..... பக்கத்து வீட்டு குமரன் சாரோ..... இல்ல... அவனோ !!! ??? படுக்கை அறையிலிருந்து வாசல் வரை செல்லும் முன், அவள் நினைவில் பலர் வந்து போனார்கள்.

தற்காப்பு சங்கலியைப் போட்டுத்தான் கதவைத் திறந்தாள். அவளால் நம்ம முடியவில்லை. அம்மா! நீ எப்படிம்மா இங்க! ஆச்சரியத்தில் கதவைத் திறக்கவே மறந்து நின்று விட்டாள். குழம்பிய அவள் முகத்தில் நிம்மதி... சந்தோசம்... திகைப்பு...! என்னடி கதவைத் திறக்க மாட்டாயா? என்று அம்மா கேட்டப் பிறகு தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. கல்யாணத்திற்கு பின் அம்மா வீட்டிற்கு வந்தால் மகள் எவ்வளவு சந்தோசப் படுவாள் என்பது அனுபவித்தால் தான் தெரியும்.

என்னடி மாப்பிள்ளையக் காணேம்? அம்மாவின் கேள்விக்கு பதில் தெரியாது விழித்தாள். பின் சமாளித்து அலுவலக வேலையா வெளியூர் போயிருக்கார்னு சொன்னதை அம்மா நம்பியதாகத் தெரியவில்லை. 25 வருட ஆசிரிய வாழ்க்கையில் இப்படி பொய் பேசிய எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பாள். ஒரு சந்தேகப் பார்வைப் பார்த்து விட்டு தன் பேத்தியைப் பார்க்கப் போனாள்.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

ஹாய்! மாம்ஸ்! என்னடா இவ்வளவு லேட்டா வர்ற... இரண்டாவது சுற்றில் இருந்த ஸ்டீவன், கார்த்திக்கைப் பார்த்துக் கண்ணடித்தான். சேரை இழுத்துப் போட்ட கார்த்திக் சர்வரிடம் ஒரு கிங்பிஷர் கொண்டு வரச் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே உட்கார்ந்தான்.
'இல்ல மச்சி, வர்ற வழில ஒரு பொண்னைப் பார்த்தேன்டா! இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கான்னா பார்த்துக் கோயேன்.'
'அப்படியா! கொஞ்சம் கண்ணைக்காமி பார்க்கலாம் ' என்றான் ஸ்டீவன் கிண்டலாக.
'போடா...' என்றான் சிரித்துக் கொண்டே.
'மாம்சு, பொண்ணு யாருடா?'
'அதான் தெரியலடா?' என்றான் கிங்பிஷரை சுவைத்துக் கொண்டே.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

'ஐஸ்சு... சாப்பிட வாடா' மாடியைப் பார்த்து கூப்பிட்டார், ராகவன்.
'டாட், நான் சாப்பிட்டாச்சு டாட்' - என்றபடியே இறங்கி வந்தாள் ஐஸ்வர்யா.
'சாப்பிட்டையா? எங்க...'
'டாட்... என் பிரண்டு ஒருத்திக்கு இன்னைக்கு பெர்த் டே, சோ, பார்ட்டிக்கு போயிட்டு வர்றேன்'
'பார்ட்டியா?' எங்கடா?'
'ஹோட்டல் லீ மெரிடியண்ட், டாட்'
'ஓ! அங்க சுந்தர் அங்கிளப் பார்த்தியா?'
'இல்ல டாட். ஏன் டாட்?'
'சுந்தர் கொஞ்ச நாளா க்ளப்-க்கு வரல. அதான் நீயாவது பார்த்தியான்னு கேட்டேன். சாயந்திரம் ஆச்சினா 'ஹோட்டல் லீ மெரிடியண்ட்'-ல தானே இருப்பான்..... அதான்'
'இல்ல டாட். வேணும்னா ராஜேஷ்ட்ட கேட்கவா டாட்?'
'வேணாம்மா, நான் பார்த்துக்கிறேன். சரி சரி லேட்டாயிடுச்சு, நீ போய் தூங்கு.'
'சரி டாட்'
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது.
செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார்.
அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

---- இமை இன்னும் திறக்கும்

1 : (ஆகா... இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற.. சனி, ஞாயிறு தொடர் உண்டா? இல்லையா?)
2 : (என்னடா? இரண்டாவது எபிசோடுலையே இப்படி பொலம்புற? சரி சரி நாளைக்கு பார்ப்போம். என்ன ஆகுதுன்னு.)
இயக்குனர் : (உதவி இயக்குனர்கள் எல்லாம் சனி, ஞாயிறு லீவு வேணும்னு கேக்குறாங்கப்பா... பாவம் வாரத்தில இரண்டு நாளாவது நம்ம மக்கள் நல்ல இருக்கட்டும்.. திங்கள் கிழமை வந்து வச்சுக்கிறேன்.)

இயக்குனர் : விபாகை

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...