Thursday, June 29, 2006

'இமைப்பொழுது' - இமை - 6


'இமைப்பொழுது' - இமை - 6


மேண்டரினில் (சீன மொழி) இருந்த அந்த துண்டுச்சீட்டில், லண்டனில் உள்ள ஓர் வங்கியில் உடனே 1 லட்சம் மலேசிய டாலர் கட்டும் படி ராகவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

யூ குய்ங் விரைவாக செயல்பட ஆரம்பித்தாள். இரு மின்னஞ்சல்கள், ஒரு போன்கால் தான், சரியாக லண்டன் நேரம் 2.00 மணிக்கு ரவிசுந்தர் கூறிய வங்கி கணக்கில் இந்திய ரூபாயில் 10 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

********** கட் 0010 ஷாட் மாத்துப்பா *************

'மம்மி...! டாடி எப்ப வருவாரு?' என்று கேட்ட சித்ராவை முறைத்துவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள் கீதா.
மீண்டும் சித்ரா,'நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மம்மி... டாடி எப்ப வருவாங்க?'
'அந்த மனுஷன் எங்க இருக்காரோ? எங்க சுத்துறாறோ? எவளுக்குத் தெரியும்.. அப்ப அப்ப காணாம போயிட வேண்டியது.. அவனவன் ஏன் கிட்ட வந்து கேட்டுக்கிட்டு. இந்த தடவை வரட்டும் இரண்டுல ஒன்னு பாத்திடுறேன்.'
'ஏண்டி மாப்பிள்ள, ஆபிஸ் விசயமா ஊருக்குப் போயிருக்கார்னு சொன்ன? இப்ப வேற என்னமோ சொல்ற? என்ன விசயம்.' என்ற படியே வந்தாள் கீதாவின் அம்மா.
'ம்ம்ம்ம்ம்.... ஒண்ணுமில்லமா, சும்மா தான், அப்ப அப்ப ஆபீஸ் விசயமா எங்கயாவது போயிடுறாருல அது தான் அப்படி சொன்னேன்' என சமாளித்தாள் கீதா.
'என்னமோடி, நீ சொல்றதுல எனக்கு ஏதும் நம்பிக்கையில்ல..... வாம்மா சித்ரா கண்ணு, பாட்டி உனக்கு கத சொல்லுறேன்' என்று சித்ராவை அழைத்துக்கொண்டு சென்றாள் கீதாவின் அம்மா.
அம்மாவிடம் தன்னால் நடிக்க முடியாதை எண்ணி வருந்தினாள் கீதா.
எல்லாத்துக்கும் காரணம் அந்த சுனிதா தான். கீதாவின் எண்ணம் பின்னோக்கி சென்றது.


********** கட் 0011 ஷாட் மாத்துப்பா *************

அன்று கீதாவின் பிறந்த நாள். மாலை குடும்பத்துடன். 'சப்வே' சென்று விட்டு, அப்படியே மல்டிப்ளக்ஸில் 'சிவகாசி' படம் பார்ப்பதாக ஏற்பாடு.
காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையில்யே உறைந்து போனாள் கீதா.

- இமை இன்னும் திறக்கும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...