Wednesday, July 13, 2011

ஒரு குட்டியும்... மூன்று தெருப்பொறுக்கி நாய்களும்...


கருப்பு வழிந்து ஓடும்
அந்த குளிர்காலத் தெருவில்
உருட்டும் நீலக்கண்கொண்டு
விழிங்கி முன்னேறியது
யாரோ பெய்து போட்ட
அந்த குட்டி

ஏறியும் இறங்கியும்
காலச்சலவை செய்யச் சொன்ன
அந்த செவ்வரிக்காரியின்
முலை தீண்டும் தருணங்களில்
எங்கிருந்தோ பரவியது
யாரோ விட்டுச்சென்ற எச்சம்

விடுபட்டு
விதியென்று
சென்ற போது தான்
காடுகள் தொலைத்த
இருளாய் போனது
அந்த அகண்ட வீதி

சிக்கிய நூல்கண்டின்
நுனி தேடி அலையும்
அந்த சாமவேளையில்
எலும்புடன் சண்டையிட்டது
உயிர்த்தீ

உலைகொதிக்கும்
தூரம் காண
துகிலுரிக்கும்
எவனுக்கும் தெரியாது
உண்மைக்கும் தலைக்கும் உள்ள தூரம்.

சரணாகதி ஆனாலும்
சூத்திரம் ஜெயிக்காதிருக்க
வனம் தின்றும்
உள்ளம் விழுங்கப் பாய்ந்திடும்
அந்த
மூன்று தெருப்பொறுக்கி நாய்கள்.

- விபாகை. ர. ராஜலிங்கம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...