
Monday, December 20, 2010
“வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா

Wednesday, October 27, 2010
நீ
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.
மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.
----------------------------------
உன் இதயத்துடிப்பின்
இசை கேட்டு
துயில வேண்டும்.
விழியில் மறுத்த
தூக்கம்
உன் மடியில் வந்தது.
----------------------------------
சற்றே பறித்த
அழகிய மலருடன்
உன்னை சந்தித்தேன்
மலரொன்றும்
அத்தனை அழகில்ல தான்.
----------------------------------
நீ
கடந்து சென்று
திரும்பி பார்க்கிறாய்.
புயல் கடந்து
தென்றல் வீசியது.
– விபாகை
Friday, November 27, 2009
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

(ஆன்மீகத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அனுபவித்து உணர்ந்திட்ட வரிகள். பாடிப்பாருங்கள். உள்ளம் கரைந்து உணர்வீர்கள்.)
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
யாமொரு பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு
சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அம்மையும் அப்பனும் தந்ததா?…..
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?.....
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததால்…..
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா…. இருமுறையா…
பலமுறை பலபிறப்பெடுக்க வைத்தாய்.
புது வினையா…. பழ வினையா…
கனம் கனம் தினம் எனை
துடிக்க வைத்தாய்.
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே…..
உன் அருள் அருள் அருள் என்று
அழைகின்ற மனம் இன்று
பிதற்றுதே….
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து
உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே! என் அய்யனே!!
‘இசைஞானி’ இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல்
– ‘ரமணமாலை’ எனும் இசைத் தொகுப்பிலிருந்து.
இன்றைய சிந்தனை
Sunday, March 15, 2009
'மனிதம்' மின்னிதழ்
வணக்கம்.
உலக மகளிர் தினத்தில் இருந்து மனிதம் எனும் மின்னிதழ் வெளிவருகிறது.
தாங்கள் 'மனிதம்' மின்னிதழில் உறுப்பினராக manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தனிமடல் இடவும்.
மனிதம் இதழ் பிரதி மாதம் 10 திகதிகளில் அனுப்பிவைக்கப்படும்.கிடைக்காத போது தயவு கூர்ந்து manidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்குதனிமடல் இடவும்.
தங்களின் நண்பர்களின்மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மாத மாதம் மனிதம் மின்னிதழ்அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர் சேர்க்கைக்கு manidham@gmail.com மின்னஞ்சலுக்கு மடலிடவும்.
புதிய படைப்பாளிகளையும் மனிதம் வரவேற்கிறது. தங்களின் படைப்புகளைeditor@manidham.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
மனிதம் படித்து எங்களுக்கு பின்னூட்டம் எழுதவும். குறை நிறைகளையும் எழுதிஅனுப்புங்கள்.
மனிதமுடன்
விபாகை.
ஆசிரியர் மனிதம்.
Wednesday, January 23, 2008
Sunday, January 13, 2008
மெட்டுக்கேத்த பாடல்
விழியோரம் மொழிபேசும் அழகோவியம் கண்டு
குயில் பாட மறந்தாளோ பெண்ணே...
நதியோரம் நடைபோடும் ஒய்யாரம் கண்டு
நதி ஓட மறந்தாளோ கண்ணே...
முகம் மறந்தது போல்
நிழல் தொலைந்தது போல்
முகம் மறந்தது போல் - என்
நிழல் தொலைந்தது போல்
என்னுள் ஒரு புது மாற்றம் கண்டேன் - அது
உன்னால் என முடிவாகக் கொண்டேன். - விழியோரம்.....
உன்னோடு தூங்கும் இருளாக வேண்டும்
விழிக்கின்ற போதும் ஒளியாக வேண்டும்
குளிக்கின்ற போதும் நீராக வேண்டும்
துடைக்கின்ற போதும் துகிலாக வேண்டும்
நெளிவின்றி நதியா?ஸ்ருதியின்றி இசையா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
காற்றின் ஒலி கேட்டு செவியாக வேண்டும்
கீற்றின் ஒளி காண விழியாக வேண்டும்
என் சோகம் தீர்க்கும் விரலாக வேண்டும்
காலத்தின் நிறம் காண நீ என்றும் வேண்டும்
பூவின்றி தேனா?'ழ' இன்றி தமிழா?
நீயின்றி நான் வாழ்வேனா?
நீ சொல்லு பெண்ணே
நான் உந்தன் கண்ணே. - விழியோரம்.....
- விபாகை
Wednesday, July 26, 2006
'இமைப்பொழுது' - இமை - 14
********** ஷாட் 0027 ************
'வாங்க சார், நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் சார், உள்ள வாங்க சார், உங்க கையால இந்த குத்து விளக்க ஏத்தி வைங்க சார்'
புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் ராகவன். ரீமாசென் போல தோற்றம் கொண்ட பெண்ணொருத்தி அவரிம் மெழுகுவர்த்தியை நீட்ட, அவளின் கரத்தை தழுவிய படியே வாங்கி தீபம் ஏற்றினார்.
விளக்கேற்றி திரும்பிய ராகவனை வரவேற்றது ஓர் இரும்புக்கரம்......
அது திலீப்குமார்.
' என்ன மிஸ்டர் ராகவன், நலமா?' என்றபடி கைகுலுக்கிய போது சிறு நடுக்க்த்தை உணர்ந்தார்.
'ஓ நல்லா இருக்கேன் இன்ஸ்பெக்டர், நீங்க எப்படி இருக்கீங்க?' என்றார் சமாளித்த படி.
'உங்களப் போல சில நல்லவர்கள் எல்லாம் எனக்கு சப்போட்ட இருக்குறப்போ எனக்கென்ன ராகவன்' என்ற திலீப் குமாரை பார்த்து சிரித்தார் ராகவன்.
' அப்புறம் ராகவன், உங்கள நான் ரொம்ப நாளா பார்த்து ஒரு உதவி கேட்கணம்னு நினைத்துக்கிட்டே இருந்தேன்'
'சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்களுக்கு பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன், சொல்லுங்க.'
' எனக்கு தெரிஞ்ச பொண்ணு, பேரு ப்ரியா, செகரட்டரிஷிப் கோர்ஸ் பண்ணியிருக்கா, உங்க ஆபீஸ்ல ஒரு வேல போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்'
' அதுக்கென்ன நாளைக்கே வரச்சொல்லுங்க, என்னோட பெர்சனல் செகரட்டரியா வச்சிக்கிறேன்'
'ஓ, ரொம்ப தேங்க்ஸ், இவ்வளவு சீக்கிரமா வேல முடியும் அப்படின்னு நான் நினைக்கவே இல்ல'.
'இதுக்கெல்லாம் என்ன சார் தேங்க்ஸ், நான் உங்களுக்கு பண்ண மாதிரி நீங்க எனக்கு எப்பவாவது உதவ மாட்டீங்களா என்ன' என பிஸினஸ்மேன் பாலிசியில் பேசினார்.
'சரி நாளை காலைல உங்க ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அப்புறம் சந்திக்கிறேனே' என்ற படி கிளம்பினார் திலீப்குமார்.
'சார், எங்களோட சின்ன அன்பளிப்பு நம்ம ஐஸ்வர்யா பாப்பாவுக்காக' என ஒரு மூன்று பட்டுச்சேலைகளை கொடுத்த கடைக்காரரிடம், இரண்டு 100 ரூபாய் கட்டை திணித்து விட்டு விடைபெற்றார், ராகவன்.
********** ஷாட் 0028 ************
செல்லிட பேசி சினுங்கிட, கையிலெடுத்த ப்ரியா, 'ஹாய் டார்லிங், என்ன காலைல இருந்து போனே பண்ணல' என்றார்.
'அதான் இப்ப பண்ணீட்டன்ல' என்ற திலீப்குமார் 'ப்ரியா, நீ நாளையிலிருந்து ராகவனோட பெர்சனல் செகரட்டரியா வேலைக்குப் போற' என்றார்.
'அய்யோ, என்னடா இது வம்புல மாட்டிவுடுற, அவன் ஒரு ஜொல்லுப்பார்ட்டின்னு நான் கேள்விப் பட்டிருக்கேன், அவன் ஆபீஸ்ல அதுவும் பெர்சனல் செகரட்டரியாவா? நோ சான்ஸ்'
'ப்ரியா, அதனால தான் நான் உன்ன அனுப்புறேன்'
'நீ யாரையும் ஈசியா சமாளிச்சிடுவ..... அப்புறம் அவங்க உன் கைப்பொம்மையா மாறிடுவாங்க.... ஆனா நீ மட்டும் அப்படியே மிஸ்,ப்ரியாவா இருப்ப.... ப்ளீஸ், ஒத்துக்க டியர்'
'சரி சரி நாளைக்கு காலைல போறேன், ஆனா அவன் அளவுக்கு மீறினா அப்புறம் நீ தான் டியர் அவனோட கொலைக் கேசையும் டீல் பண்ண வேண்டி வரும், சரியா' என்றாள் சிரித்த படி.....
' ஓகே, பை'
********** ஷாட் 0029 ************
காலையில் அலுவலகம் கிளம்பும் போது ராகவனின் வேலைக்காரனிடம், 'ஏய், அந்த டெண்டர் பைல் எங்க' என்றவரிடம், 'இந்த..... இங்க தான் இருக்கு, பேசாம ஒரு செக்டரி வெச்சா என்னவா' என்றான் வேலைக்காரன். முப்பது வருசமா வேல பார்க்கிறான், அவரிடம் அவனுக்கு கொஞ்சம் உரிமை அதிகம் தான்.
'அது செக்டரி இல்லடா, செகரட்டரி' என்றார்.
'அது என்னவோ, புரிஞ்சா சரி' என்றபடியே சென்றான்.
அப்போ தான் அவருக்கு திலீப்குமார் கூறிய ப்ரியாவின் நினைப்பு வந்தது.
காரில் செல்லும் போது அவருக்கு ப்ரியாவின் நினைப்பு தான்.
சினேகா முதல் நமிதா வரை அனைவரும் அவர் கண்முன் வந்து சென்றார்கள்.
********** ஷாட் 0030 ************
அலுவலகத்தின் வாசலில் இறங்கி அவரின் அறைக்குச் சென்ற ராகவனுக்கு உள்ளே ஒரு அதிர்ச்சிக் காத்திருப்பது தெரியாது.....
அது என்ன?
- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை
Wednesday, July 19, 2006
'இமைப்பொழுது' - இமை - 13
'இமைப்பொழுது' - இமை - 13
ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். விழியில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது பத்ரியின் தோள் மீது ஒரு கை பட, திடுக்கிட்டுத் திரும்பினான்.
' என்ன பத்ரி, போலீஸ் அது இதுன்னு ஒரே பரபரப்பாக இருக்கு' ஒண்ணும் தெரியாதவனாய் குமார் விசாரிக்க, கண்ணில் கோபத்துடன் குமாரை முறைத்தான் பத்ரி.
' என்னடா, வெவரம் என்னென்னா என்ன மொறக்கிற'
'எல்லாம் உன்னால தான், சரி அப்புறம் பேசலாம், மொதல்ல இங்கயிருந்து கிள்ம்புவோம்.'
'ஏய், நீ அவசரப் படுறதப் பார்த்தா, நீயே கொலை செஞ்சிருப்ப போல இருக்கு?' என்ற குமாரை மீண்டும் ஒரு முறை முறைத்து வண்டில் ஏறி 'உட்காருடா' என்றான் வெறுப்பாக.
********** ஷாட் 0025 *************
'கொடைக்கானல்'
அழகிய வெள்ளை நிற 'சுவராஜ் மஸ்டா' கோடை ஏரிக்கரையில் வந்து நின்றது,
கதவைத் திறந்து கொண்டு வண்ண வண்ண தேவதைகள் துள்ளிக் குதித்து இறங்கினர். கோடை குளிரில் நனைந்த வாலிப உள்ளங்கள் அவர்களைக் கண்டு வாழ்த்து இசைத்தனர். பழகிய தேவதைக் கூட்டம் கண்டு கொள்ளாது சென்றனர்.
இறுதியாக கீழே இறங்கிய ஐஸ்வர்யாவைப் பார்த்து அந்த ஏரி கூட உடல் சிலிர்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஐஸ்வர்யா காலை தரையில் வைத்தவுடன்..
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி. 'யாராஇருக்கும்?' கேள்வியோடு பார்க்க, அதில்
' உன் கால் பட்ட இடங்களில்
என் கரம் தொட்டுக் காக்க
வரம் கொடு.'
- விழியன்
மீண்டும் அவளிடத்தில் ஓர் கேள்வி, 'யார் இந்த விழியன்?' நின்று விழித்த ஐஸ்வர்யாவை அவள் தோழி ரூபா காதில் காற்றூதிக் கலைத்தாள்.
' என்னடி கொடைக்கானல கால் வச்சவுடன் அப்படியே திகைச்சுப் போயிட்ட? ம்.'
தனது செல்லிடபேசியில் செய்தியை அவளிடம் காண்பிக்க 'அப்படிப் போடு, அது தான் சங்கதியா? யாருடி இந்த விழியன்? எனக்குத் தெரியாம?' என்ற ரூபாவை முறைத்த ஐஸ்
'அவன் இங்க எங்கேயோ இருக்கணும், இல்லைனா எப்படி நான் கீழே கால் வச்சதும் மெசேஜ் அனுப்புவான் ' என்றவாறு சுற்றி சுற்றி பார்க்க, மீண்டும்
'பீப் பீப்......பீப் பீப்......'
செல்லிட பேசியில் செய்திக்கான அறிகுறி.
'விழிகளால் தேடாதே
விழியனை,
மொழிகள் பேசிட
வழிகள் பிறக்கும்'
- விழியன்
'ஆஹா.......நம்ம ஐஸ் அக்கா மாட்டிக்கிட்டாளா?' நண்பர்கள் கூட்டம் கிண்டலடிக்க,
அச்சம் கலந்த புன்னகை, லேசான கோபம், அவமானம் அனைத்தும் அவள் விழிகளில்.
- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை
Tuesday, July 18, 2006
'இமைப்பொழுது' - இமை - 12
********** கட் 0021 ஷாட் மாத்துப்பா *************
'தட தட தட தட தட தட தட தட தட தட' தலைதெறிக்க ஓடி வந்த முத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ' டேய், டேய், அங்க ஒருத்தனை அடிச்சேக் கொன்னுட்டான் நம்ம குமார்டா.'
' என்னடா சொல்ற'
' ஏய் நிஜமாவா?'
' மெய்யாலுமாடா?'
நண்பர்கள் ஆளுக்கொருவராய் கேட்க, பேச முடியாத முத்து, ' ஆமா, என்பது போல் தலையசைத்து தலை குனிந்து மூச்சு வாங்கினான்..
எங்கடா? என்றவாறு முத்து வந்த திசையை நோக்கி ஓடினான் பத்ரி.
ஆள் ஆரவாரமற்ற அந்த முச்சந்தியில் ஒருவன் தரையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்க, குமார் தனது காரில் ஏறிச் சென்றி விட்டான்.
ஓடிச் சென்ற பத்ரி கீழே விழுந்தனைத் திரும்பிப் பார்த்து அதிர்ந்தான்..
அது.........
********** கட் 0022 ஷாட் மாத்துப்பா *************
'டாட் எங்க காலேஜ்ல நாங்க டூர் போறாம், எனக்கு ஒரு 10,000 ருபீஸ் வேணும் டாட்.'
'வாவ், 10000 ருபீஸ் என்னடா 20000 ருபீஸ் தர்றேன், ஆனா நீ மட்டும் டூர் போகமா என் கூட இருந்திருடா'
'டாட், போங்க டாட், என்ன எங்கேயுமே விட மாட்டீங்கிறீங்க, இல்ல டாட் நான் கண்டிப்பா போவேன்'.
'ஓகே, எத்தனை நாள்?'
'3 டேஸ் டாட்'
'அய்யோ, 3 டேஸ்ஸா..... உன்னை பாக்காம ஒரு நாள் இருக்குறதே கஷ்டம், அதுவும் 3 டேஸ்னா, எப்படிடா?...'
'டாட் ப்ளீஸ் டாட், ப்ளீஸ்......'
'ஒகே...ஓகே'
'ஸ்வீட் டாட்' என்றவாறே ராகவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்தாள் ஐஸ்வர்யா.
********** கட் 0023 ஷாட் மாத்துப்பா *************
'ஸார், நம்ம மூணாவது முக்கிய வீதியில் ஒரு பிணம் கிடக்குது சார்' கான்ஸ்டபிள் 302, இன்ஸ்பெக்டரிடம் கூற, போன மாத ரேப் கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சலிப்புடன் நிமிர்ந்து,
யாரது? வயது என்ன இருக்கும்? சரி சரி வாங்க போயி பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.
********** கட் 0024 ஷாட் மாத்துப்பா *************
'போரன்சிக் லேப்க்கு சொல்லியாச்சாப்பா?, பாடிய போஸ்ட்மார்ட்டம் அனுப்பு, நேர்ல பார்த்த சாட்சி யாராவது இருக்காங்களா? என்றவாறே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
'இல்ல சார், யாரும் பாக்கலையாம்' என்றார் கான்ஸ்டபிள் 302.
ஆம்புலன்ஸ் ஒலியை எழுப்பிக் கொண்டே வந்து பாடியை அள்ளிக் கொண்டு சென்றது.
'மீண்டும் ஒரு தலைவலி என்றவாறே ஜீப்பில் ஏறிப் பறந்தார், இன்ஸ்பெக்டர்.
இவை அனைத்தையும் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.
- இமை இன்னும் திறக்கும்.
இயக்குனர் : விபாகை