Friday, February 11, 2011

வீதியெங்கும் விளக்குகள் - தினம் ஒரு கவிதை

வீதியெங்கும் விளக்குகள்
இருளகற்றி
எண்ணெய் விட்டு
சுட்டெரியும் அழகு.

மண்ணெண்ணெயே இல்லா
அடுகளையில்
நல்லெண்ணெய் விட்டா
நளபாகம் உருவாகும்?

விளக்கின் அடியில்
வழித்தெடுத்தால்
ஒருவேளை உண்ணவாவது
வழி கிடைக்கும்.

உணவின் உரசலின்றி
எண் குடலும்
குருதிப்புன்னகை
பூசிக் கொண்டது.

வீதியெங்கும் விளக்குகள் !!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...