Monday, February 21, 2011

நாட்களும் நேரமும் - தினம் ஒரு கவிதை


நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.
விடியலின் புதையலை நோக்கி
வாளெடுத்து மற்றொரு பயணம்.
நாம் பயணப்படும் நோக்கு
தொலை(ந்த) நோக்காகவே !
காலம் கடந்து; கானல் நீருண்டு
காணாத கனவிது.
சிறுதுளி தஞ்சம் புகும்
தேவைகளின் தேடலில்,
நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...